Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை பொருளாதார நெருக்கடி.. விழுந்தது முதல் விக்கெட்! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரோஷன் ரணசிங்கே

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி ரோஷன் ரணசிங்கே என்பவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Recommended Video

    Reason for Sri Lanka Economic Crisis Explained | OneIndia Tamil

    இலங்கையில் கொரோனா காலத்தில் வருமானம் தடைப்பட்டது. இதனால் அந்நாடு அதிகளவில் கடன் வாங்கியது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது.

    பிற நாட்டு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது.

    விலை உயர்வு

    விலை உயர்வு

    இதனால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளன. அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலைகள் எகிறியுள்ளன. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதோடு, மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பு உள்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

    அவசர நிலை பிரகடனம்

    அவசர நிலை பிரகடனம்

    பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு உள்பட சில இடங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் ஆளும் அரசை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை கட்டுப்படுத்தும் வகையில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அமைச்சர் ரோஷன் ரணசிங்கே

    அமைச்சர் ரோஷன் ரணசிங்கே

    இதற்கிடையே பொலொன்னருவா மக்களவை தொகுதியில் எம்பியாக இருக்கும் ரோஷன் ரணசிங்கே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எஸ்எல்பிபி கட்சியை சேர்ந்த இவர் அங்குள்ள மத்திய அமைச்சரவையில் ராஜாங்க அமைச்சராக செயல்பட்டு வந்தார். இவர் மகான சபைகள் மற்றும் உள்ளாட்சி விவகாரத்துறையை நிர்வகித்து வந்தார்.

    மே 1 முதல் ராஜினாமா

    மே 1 முதல் ராஜினாமா

    இந்நிலையில் இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ரோஷன் ரணசிங்கே இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பினார். மொத்தம் 7 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

    மக்களிடம் மன்னிப்பு

    மக்களிடம் மன்னிப்பு

    மேலும், தனது மாவட்டத்தில் விவசாயிகள் அதிகமாக வாழும் நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். இந்நிலையில் பிரச்சனைகளை நேரடியாக கூற கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+