இலங்கையில் உச்சகட்ட பதற்றம்- மகிந்த ராஜபக்சே வீடு முன் 3,000 மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்!
கொழும்பு: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இலங்கையில் சீரழிந்துவிட்ட பொருளாதார பேரழிவுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி பெரும் போராட்டங்கள் தொடர்ந்து கொழும்புவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராஜபக்சேக்கள் அரசு படுதீவிரம் காட்டி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.

மேலும் போராட்டங்களில் ஈடுபடுவோரை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவம் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அரசியல் குழப்பமும் தொடருகிறது.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இடைக்கால அரசாங்கமும் எனது தலைமையில்தான் அமைய வேண்டும் என்கிறார் மகிந்த ராஜபக்சே. அத்துடன் சிங்களரைப் போல தமிழரும் ராஜபக்சேக்களுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக கோரி அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் போராட்டம் இன்று மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தது. இப்போராட்டத்தின் ஒருபகுதி விஜோராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சே வீடு முன்பாக திரண்டது. மகிந்த ராஜ்பாக்சே வீட்டை முற்றுகையிட்ட இந்த போராட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டிருந்தனர். இதனால் அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என்கிற பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications