ஏதாவது செய்ங்க.. பொருளாதார பிரச்சினையை தீருங்க.. இலங்கை அரசியல்வாதிகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் அசாதாரண சூழலை தீர்க்க புதிதாக அமையும் அரசு உடனடித் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி சிக்கித் தவித்துள்ளது. பணத்தை செலுத்தாததால் பெட்ரோல் டீசல் நிறுவனங்கள் இலங்கைக்கு டீசல் தர மறுத்துவிட்டன.
இதனால் மக்கள் பெட்ரோல் டீசல் கிடைக்காமலும் இருக்கும் பெட்ரோல் டீசலை பெற பங்க்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தொடர்கதையானது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது.

தொழில்கள் பாதிப்பு
ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. அது போல் அரசு கஜானாவும் காலியாக உள்ளதால் அரசு ஊழியர்களும் ஊதியமின்றி தவித்து வருகிறார்கள். இதற்கு தீர்வு ராஜபக்ச அரசை துரத்துவதுதான் என மக்கள முடிவு செய்தனர்.

போராட்டம்
இதையடுத்து தங்கள் போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முதல் முன்னெடுத்து வருகிறார்கள். பிரதமராக இருந்த ராஜபக்சவை மக்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து அனைத்து கட்சி அரசு அங்கு அமைந்தது. பிரதமராக ரணில் விக்கிரசிங்கே பதவியேற்றார்.

பொருளாதாரம்
எனினும் இலங்கை பொருளாதாரத்தில் எந்த வித வளர்ச்சியும் எட்டவில்லை. இதையடுத்து நேற்றைய தினம் இலங்கை அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. இதையடுத்து அதிபர் மாளிகையே போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது.

அசாதாரண சூழல்
தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் ரணிலும் அதிபர் கோத்தபயவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு அமெரிக்கா ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை மக்களின் அதிருப்தியை தணிக்க புதிதாக அமையும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். நீண்ட காலத்திற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை இலங்கை எட்டுவதற்கான முயற்சிகளை வேகமாக செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications