16 வயது சிறுமியை தனிமையில் சந்தித்த இளைஞர்.. விளைவு ஆட்டோவில் குழந்தை பெற்ற அவலம்.. போக்சோவில் கைது
Recommended Video

கடலூர்: கடலூரில் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உஷாராணி. இவருக்கு கணவர் இல்லை. இரு மகள்கள் உள்ளனர். இவர்களை காப்பாற்றுவதற்காக இருவரையும் ஊரிலேயே தங்க வைத்துவிட்டு திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய 16 வயது மகள் சிதம்பரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கும் விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ராகுல் (19) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

தனிமையில் சந்திப்பு
இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் தனிமையில் சென்று காதலை வளர்த்துக் கொண்டனர். இதன் விளைவு அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து ராகுலிடம் சொன்னபோது மீண்டும் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பலமுறை தனிமையில் சந்தித்துள்ளார்.

மருத்துவமனையில்
கடந்த 30-ஆம் தேதி அந்த மாணவிக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளதாக அவரது உறவினரிடம் கூறியுள்ளார். அப்போது உடனே ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். அப்போதே மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இதனை தொடர்ந்து தாயும், சேயும் குமராட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொய் கூறிய இளைஞர்
இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாய் சம்பவ இடத்துக்கு வந்தார். இதையடுத்து சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல் துறையினர் ராகுலை அழைத்து விசாரித்தபோது அந்த சிறுமிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.

சிறைக்கு சென்ற இளைஞர்
ராகுல் பொய் கூறுகிறார் என்பதை அறிந்த போலீஸார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டியதுதான் என மிரட்டினர். அதற்கு ராகுல், அந்த மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே நான் சிறைக்கே செல்கிறேன் என கூறினார்.

எதிர்பார்ப்பு
16 வயது மாணவியுடன் தனிமையில் இருந்து விட்டு தற்போது பிரச்சினை என வந்தவுடன் ஜாதியை இழுக்கும் இந்த ராகுல்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications