கடலூர் ஆசிரியை பயங்கர கொலையில் திடீர் திருப்பம்.. தேடப்பட்ட கொலையாளி தற்கொலை
Recommended Video

கடலூர்: கடலூரில் பள்ளி ஆசிரியை பயங்கரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொலையாளி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ரம்யா (23). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் ஒரே பேருந்தில் சென்று வந்ததால் நட்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில் ராஜசேகருக்கு ரம்யா மீது காதல் ஏற்பட்டது.

சம்மதிக்க
தனது விருப்பத்தை ரம்யாவிடம் கூறியுள்ளார். அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் விடாமல் ரம்யாவை விரட்டி விரட்டி காதலை வெளிப்படுத்தியுள்ளார். ரம்யாவோ, "நாம் இருவரும் வேறு வேறு சமூகத்தினர். எங்கள் வீட்டில் நிச்சயம் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.

ரம்யா வீட்டில்
எனவே உங்கள் வீட்டில் பெரியவர்களை அழைத்து வந்து எங்கள் வீட்டில் பேச சொல்" என ரம்யா கூறிவிட்டார். இதனால் பாதி மகிழ்ச்சி அடைந்த ராஜசேகர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் ரம்யாவின் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை.

கழுத்தறுத்த ராஜசேகர்
இதனால் ரம்யாவும் ராஜசேகரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இது ராஜசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 22-ஆம் தேதி காலை பள்ளிக்கு வந்த ரம்யா, அங்கு தனியாக இருக்கும் போது ராஜசேகர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

குறுஞ்செய்தி
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ரம்யாவின் சடலத்தை அப்புறப்படுத்தினர். கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜசேகரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜசேகரின் தங்கை செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தியை ராஜசேகர் அனுப்பியிருந்தார்.

பதற்றம்
அதில் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என அனுப்பியுள்ளார். இதையடுத்து அவரது செல்போனை போலீஸார் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருநாவலூர் காட்டுப் பகுதியில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றினர். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications