Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் ஆதரவின்றி குடிசையில் வசித்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியைக்கு வீடு கட்டிக்கொடுத்த மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கவரப்பாளையத்தை சேர்ந்த சந்திரா என்பவர் 1980கள் தொடங்கி 90கள் வரை தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது 75 வயதாகும் சந்திரா வறுமையில் தவித்தார். குடிசையில் ஆதரவு இன்றி வசித்த அவருக்கு அவரிடம் படித்த மாணவர்கள் புதிதாக வீடு ஒன்றை கட்டி தந்துள்ளனர். குடிசை வீடு இருந்த இடத்தில் புதிதாக கான்க்ரீட் வீடு அமைக்கப்பட்டுள்ளது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தான் வழக்கம். ஆனால் இதில் ஆசிரியர் பணி மிக முக்கியமானது. அவர்கள் தான் பலருக்கு அறியாமை என்ற இருளை நீக்கி, கல்வியை போதிப்பவர்கள். அவர்கள் கல்வியை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் போதிப்பவர்கள். பள்ளி ஆசிரியர்கள் பலர் அந்த காலத்தில் செய்த பணிகள் அளப்பரியது. அவர்கள் செய்த அற்புதமான பணியால் இன்று ஏழை மாணவர்கள் பலர், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல ஏழைகள் கல்வியில், பொருளாதாரத்தில் இன்று சிறந்து விளங்க பள்ளி ஆசிரியர்களே காரணம்.

Cuddalore students built a house for retired headmistress who lived in a shack without support

குறிப்பாக அந்த காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் பலர் தங்களது சொந்த பணத்தையும் போட்டு வறுமையில் உள்ள மாணவர்கள் படிக்க உதவினார்கள். ஆனால் அப்படி உதவிய ஆசிரியர்கள் தற்போது வறுமையில் தான் இருக்கிறார்கள். இப்போது வேண்டுமானாலும் ஆசிரியர்கள் சம்பளம் ஓரளவு கணிசமாக மாறி இருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆசிரியர்கள் சம்பளம் மாறவில்லை. கடலூரில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி பார்ப்போம்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கவரப்பாளையத்தை சேர்ந்த 75 வயதாகும் சந்திரா வனகிரி பெருமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1981-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றார். இருப்பினும் அவர், ஆதரவின்றி தனியாக ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த அவரிடம் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள், புதிய வீடு கட்டிக்கொடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் ஒன்றாக கூடி பேசி ரூ.3.5 லட்சம் வசூலித்தனர். இதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியைக்கு அவர் வசித்து வந்த குடிசை வீட்டை இடித்து விட்டு புதிதாக கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்தார்கள். அதற்கான சாவியை பெற்ற சந்திரா, நெகிழ்ச்சி அடைந்தார்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை சந்திரா திருமணமாகி 5 ஆண்டுகளில் அவரது கணவர் இயற்கை எய்தி விட்டார். வாரிசுகளும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். இதனால் ஆதரவற்றி தவித்த அவருக்கு தற்போது முன்னாள் மாணவர்கள் புதிய வீடு கட்டி புது நம்பிக்கையை அளித்து, அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள். தனக்கு முன்னாள் மாணவர்கள் வீடு கட்டி கொடுத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ள சந்திரா, தன்னை போல் இருக்கும் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+