ரயில்வே கேட் திறந்தே இருந்தது.. ரயில் சத்தமும் கேட்கவில்லை.. காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் வாக்குமூலம்!
கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் முக்கிய வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி, ரயில்வே கேட் மூடப்படவில்லை.. அது திறந்தே இருந்தது என்றும், ரயில்வே கேட் கீப்பர் அவரது அறையிலேயே அமர்ந்திருந்ததாக கூறி இருக்கிறார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பள்ளி வாகன ஓட்டுநர் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி சாருமதி, மாணவர் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சாருமதியின் சகோதரர் செழியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3 மாணவர்கள் உயிரிழப்பு
இதனால் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இந்த ரயில் விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் ரயில்வே கேட்டை மூடாமல், தூங்கி கொண்டிருந்ததாக கூறி வருகின்றனர். ஆனால் தெற்கு ரயில்வே தரப்பில், பள்ளி வாகன ஓட்டுநர் கேட்டதால், ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்ததாக கூறப்பட்டுள்ளது.
முரணாக சொல்லும் ரயில்வே நிர்வாகம்
இந்த ரயில் விபத்தை நேரில் பார்த்தவர் உட்பட பொதுமக்கள் அனைவரும் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்றும், அவரின் ரயில்வே கேட்டை மூடவில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் ரயில்வே நிர்வாகம் தொடர்ச்சியாக, ரயில்வே கேட் காலை 7.05 மணிக்கு மூடப்பட்டுவிட்டது. ஆனால் பொதுமக்கள் கேட்டதால், பங்கஜ் சர்மா கேட்டை திறந்திருக்கிறார் என்றே கூறி வருகிறது.
மாணவர் விஸ்வேஷ் பேட்டி
இந்த நிலையில் ரயில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவர் விஸ்வேஷ் மற்றும் பள்ளி வேன் ஓட்டுநர் ஆகியோர் முக்கிய வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதன்படி விஸ்வேஷ் பேசுகையில், விபத்து நடந்த போது காலை 7.30 மணி இருக்கும்.. ரயில்வே கேட் போடப்படவில்லை.. திறந்தே தான் இருந்தது. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை. சில நேரம் நாங்கள் வருவதற்கு முன்பாக ரயில் கடந்திருக்கும்.
ரயில்வே கேட் திறந்திருந்தது
அதனால் பள்ளி வேன் ஓட்டுநர் வழக்கம் போல் சென்றார். திடீரென ரயில் மோதி விபத்து நடந்துவிட்டது. விபத்து நடந்த போது எனக்கு மயக்கம் எதுவும் வரவில்லை. அப்போது பார்த்த போது, ரயில்வே கேட் கீப்பர் அவரது அறையிலேயே இருந்தார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பள்ளி வேன் ஓட்டுநர் பேசும் போது, ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.. ரயில் வரும் சத்தமும் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரே குரலில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டோர்
ரயில் விபத்தை பார்த்த பொதுமக்கள், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர், தனியார் பள்ளி ஓட்டுநர் உட்பட அனைவரும் ஒரே குரலில் கேட் மூடப்படவில்லை என்று கூறி வருகின்றனர். ஆனாலும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கேட்டதால், கேட் திறக்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று கூறி வருகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications