ரூ. 700 க்கு விற்ற பிராந்தி, விஸ்கி இப்போ 4,000.. கள்ளச்சாராயம் குடித்த முதியவர்.. பலி!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் மதுபானம் கிடைக்காததால், கள்ளச்சாராயம் குடித்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இன்று வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரூபாய் 700 க்கு விற்கப்பட்டு வந்த புல் பாட்டில் பிராந்தி மற்றும் விஸ்கி தற்போது ரூபாய் 4,000 வரையில் கள்ளச் சந்தையில் விற்பனையாகிறது.

ஒருபக்கம் ஊரடங்கு உத்தரவால், வருமானம் இல்லாமல் தவித்து வரும் மதுப்பிரியர்கள், அதிக விலை கொடுத்து மதுவை வாங்க முடியாததால், கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்த தொடங்கியுள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. அதேபோல்
மது கிடைக்காத விரக்தியில் மதுப்பிரியர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.

மேலும் மாற்று போதைக்கு ஆசைப்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. அந்தவரிசையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாசு. மது போதைக்கு அடிமையான இவர், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியலிருந்து மது குடிக்காமல் அவதிபட்டு வந்துள்ளார். இதனிடையே அந்த பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கள்ளச்சாராயம் விற்க்கப்படுவதை அறிந்த சந்திரகாசு, அங்கு சென்று சாராயம் குடித்துள்ளார்.

ஆனால் சாராயம் குடித்த சில மணி நேரங்களிலேயே சந்திரகாசு மற்றும் அந்த பகுதியில் சாராயம் குடித்த இருவருக்கு வாயில் நுரை தள்ளி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்கள் மூன்று பேரையும் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சந்திரகாசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கள்ளத்தனமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் அசாம், மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களை போன்று தமிழக அரசும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மதுபானக் கடைகளை திறந்து வைக்க வேண்டுமென மதுப்பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications