ரூ. 700 க்கு விற்ற பிராந்தி, விஸ்கி இப்போ 4,000.. கள்ளச்சாராயம் குடித்த முதியவர்.. பலி!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் மதுபானம் கிடைக்காததால், கள்ளச்சாராயம் குடித்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இன்று வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரூபாய் 700 க்கு விற்கப்பட்டு வந்த புல் பாட்டில் பிராந்தி மற்றும் விஸ்கி தற்போது ரூபாய் 4,000 வரையில் கள்ளச் சந்தையில் விற்பனையாகிறது.

ஒருபக்கம் ஊரடங்கு உத்தரவால், வருமானம் இல்லாமல் தவித்து வரும் மதுப்பிரியர்கள், அதிக விலை கொடுத்து மதுவை வாங்க முடியாததால், கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்த தொடங்கியுள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. அதேபோல்
மது கிடைக்காத விரக்தியில் மதுப்பிரியர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.

மேலும் மாற்று போதைக்கு ஆசைப்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. அந்தவரிசையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாசு. மது போதைக்கு அடிமையான இவர், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியலிருந்து மது குடிக்காமல் அவதிபட்டு வந்துள்ளார். இதனிடையே அந்த பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கள்ளச்சாராயம் விற்க்கப்படுவதை அறிந்த சந்திரகாசு, அங்கு சென்று சாராயம் குடித்துள்ளார்.

ஆனால் சாராயம் குடித்த சில மணி நேரங்களிலேயே சந்திரகாசு மற்றும் அந்த பகுதியில் சாராயம் குடித்த இருவருக்கு வாயில் நுரை தள்ளி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்கள் மூன்று பேரையும் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சந்திரகாசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கள்ளத்தனமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் அசாம், மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களை போன்று தமிழக அரசும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மதுபானக் கடைகளை திறந்து வைக்க வேண்டுமென மதுப்பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications