3 மாத குழந்தை இறப்புக்கு தடுப்பூசி காரணமா? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்! நீடிக்கும் குழப்பம்!
கடலூர்: 3 மாத குழந்தையின் இறப்புக்கு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி காரணமில்லை என சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏ.கே.பாளையத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணராஜ் -காந்தி பிரியா தம்பதி. இவர்களுக்கு தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு கலையூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 3 மாத தடுப்பூசி செலுத்தப்பட்ட அன்று இரவே குழந்தைக்கு வயிறு உப்பியிருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி வந்த நிலையில், பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கள் குழந்தையின் மரணத்துக்கு தடுப்பூசி தான் காரணம் எனக் கூறி பெற்றோர் கதறி துடித்துள்ளனர்.
அதற்குள் இந்த விவகாரம் அமைச்சர் மா.சுப்ரமணியன் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. இதையடுத்து சுகாதாரத்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டு அழுததால், வீட்டில் இயற்கை மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒவ்வாமையால் வயிறு உப்பி உயிரிழந்திருக்கலாம் என்றும் குழந்தையின் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஸ்விக் ராஜை போல் மேலும் 6 குழந்தைகளுக்கு கலையூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அந்தக் குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் குழந்தை உயிரிழப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்றும் தடுப்பூசி போட்ட பிறகு அரை மணி நேரம் கண்காணிப்பு பிறகே குழந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பமும் சர்ச்சையும் நீடிப்பதால் காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த துயர நிகழ்வு கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications