Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி மாணவி இறுதிச்சடங்கு.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு - வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு

மாணவியின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் நடைபெற உள்ளது - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: பள்ளி மாணவியின் இறுதிச்சடங்கு நடைபெறும் பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி பன்னிரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நடைபெற உள்ள மாணவியின் வீடு மற்றும் சுடுகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உறவினர்களும், உள்ளூர் மக்களும் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அதன் காரணமாக கடந்த 17 ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதனிடையே இந்த மரணத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவை அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என மாணவியின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று காலை நடந்த விசாரணையின்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை வாங்க மறுப்பது ஏன், பெற்றோர் மீது இந்த நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. ஆனால் மாணவியின் உடல் மீது பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் என நீதிபதி காட்டமாக பேசினார். இதையடுத்து பெற்றோர் தரப்பு, தங்களுக்கு மறுஉடற்கூராய்வில் திருப்தி இல்லை. இரு உடற்கூராய்வு வீடியோக்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 ஜிப்பர் மருத்துவமனை

ஜிப்பர் மருத்துவமனை

இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி, இரு உடற்கூராய்வு அறிக்கைகளை புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறேன். கண்ணியமான முறையில் இறுதி சடங்குகளை நடத்துங்கள். உங்கள் மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகிறார்கள். அது உங்களுக்கே தெரியாமல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சமூகவலைதளங்கள் பொய் செய்தியை பரப்பி உள்ளன. நாளைக்குள் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். இல்லாவிட்டால் காவல் துறை சட்டபடி நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் உடலை அவரது உடலைப் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது.

போலீஸ் குவிப்பு

போலீஸ் குவிப்பு

இந்த நிலையில் பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி பன்னிரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நடைபெற உள்ள மாணவியின் வீடு மற்றும் சுடுகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இறுதிச் சடங்கில் வெளியூர் நபர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்ற தாய் கதறல்.. பெரும் சோகம்
     உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதி

    உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதி

    நேற்று இரவு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் இறுதிச் சடங்கில் வெளி நபர்களோ வெளியூரை சேர்ந்தவர்களோ வேறு ஏதேனும் அமைப்பை சேர்ந்தவர்களோ கலந்து கொள்ள அனுமதி இல்லை எனவும் உறவினர்கள் மட்டும் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி என தெரிவித்தனர். அதே போன்று இறுதி சடங்கில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாக கலந்து கொள்ளலாம். தேவையற்ற இடங்களில் கூட்டம் கூடக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    உள்ளூர் மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு மாணவியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் இறுதி சடங்கு செய்ய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாதுகாப்புகளையும் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+