எப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டீங்க... எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாமக கேள்வி
Recommended Video
கடலூர்: எல்லா வன்னியர்களும் உங்களை போல் திமுகவுக்கு அடிமையாக இருப்பார்கள் என நினைக்கவேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாமக பதிலடி கொடுத்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று முன் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வைத்தி புதிதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சந்தையின் முகப்பில் சண்டையிடுவோரை போல் சகதி வார்த்தைகளை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அள்ளி தெளிப்பதாகவும், இது தான் திமுகவின் இன்னாள் தலைவர் கற்றுத்தந்த நாகரீகமோ என வினவியுள்ளார்.

வடமாவட்டங்களில் வன்னியத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் ஸ்டாலின் அவமதிப்பதாக கூறி மதுரைக்கு சென்று மு.க.அழகிரியிடம் சரணடைந்தீர்களா? இல்லையா? என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாமக துணைப்பொதுசெயலாளர் வைத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜெ.குரு திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்து அமைச்சர் பதவியிலிருந்து விலகாதது ஏன் வினவியுள்ளார்.
ஜெ.குருவை கொல்ல திமுக தலைமை சதித்திட்டம் தீட்டியதாகவும், அதுபற்றிய உண்மைகள் தெரிந்தும் அமைச்சர் பதவியை காப்பற்றிக் கொள்வதற்காக வாய்மூடி அமைதியாக இருந்தவர் தான் இந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என சாடியுள்ளார். மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவை பற்றி பேச திமுகவுக்கோ, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு எந்த தகுதியுமில்லை என தெரிவித்துள்ளார்.
1989-ல் வன்னியர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது என ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தீர்கள், அப்போது இருந்த வீரமும், சுயமரியாதையும் இப்போது எங்கே போனது என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியுள்ளார். இனி வரும் நாட்களிலாவது பழைய பன்னீர்செல்வமாக மாற வேண்டும் என பாமக துணைப் பொதுச்செயலாளர் வைத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications