பள்ளி செல்ல காத்திருந்த மாணவன் குத்திக் கொலை.. பட்டப்பகலில் பயங்கரம்.. என்ன காரணம்? அதிர்ந்த கடலூர்!
கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி பேருந்து நிறுத்தத்தில் இன்று காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். மேல்புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற பிளஸ் 2 மாணவரும் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தார். இந்த நிலையில், பேருந்து நிறுத்தத்தில் ஜீவாவுக்கும், மற்றொரு நபருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த நபர் ஜீவாவை அருகே உள்ள ஓடை பகுதியில் பேசுவதற்காக அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். மின் வாரியத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவர், பள்ளி மாணவன் ஜீவாவை கொலை செய்தது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆனந்த், ஜீவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
கத்தியால் குத்தப்பட்ட ஜீவா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் ஜீவாவை கொலை செய்துவிட்டு தப்பிய ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் காரணமாக ஜீவா கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி செல்லக் காத்திருந்த பிளஸ் 2 மாணவன் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications