தித்திக் ஆபரேஷன்.. காணாமல் போன 3 சிறுமிகள்.. 8 மணி நேரத்தில் மீட்பு.. பாராட்டு மழையில் போலீஸ் !
கடலூர் : கடலூர் மாவட்டம் அருகே, காணாமல் போன சிறுமிகளை, அதிவிரைவாக செயல்பட்டு 8 மணி நேரத்தில் மீட் போலீசாருக்கு, காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு சேர்ந்த 3 சிறுமிகள், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள், திடீரென்று மாயமாகினர்.

காணவில்லை
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமிகள் கிடைக்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள், உடனடியாக கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

என்ன நடந்தது?
பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் என பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், 3 சிறுமிகளை உடனடியாக கண்டுபிடிக்குமாறு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார்
இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் களமிறங்கிய போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவர்களை ஆய்வு மேற்கொண்டனர். 3 சிறுமிகள் காணாமல் போன போது, சந்தேகப்படுபடியான வாகனங்கள் ஏதேனும் சென்றதா? என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

3 பேர்
அப்போது மாணவிகள் காணாமல் சென்ற நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றைதைக் கண்ட போலீசார், உடனடியாக அந்தப் பேருந்து நடத்துனரிடம் விசாரணை நடத்தியபோது துப்பு கிடைத்தது. கடலூர் முதுநகரிலிருந்து திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு மூன்று சிறுமிகள் பேருந்தில் ஏறிச் சென்றதும், குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி என்ற பகுதியில் இறங்கியதும் தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக கொத்தவாச்சேரி கிராமத்திற்கு சென்று, அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த வீட்டில், மூன்று மாணவிகள் புதிதாக வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

3 சிறுமிகள்
இதனை அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மூன்று சிறுமிகளையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து 3 சிறுமிகளை மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோர்களிடம் சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் சிறுமிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications