கடலூர் பேருந்து நிலையத்தின் எதிரே என்ன நடக்குதுன்னு பாருங்க.. உஷார் மக்களே!
கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்தின் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டபகலில் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.'
வாகனத்தை திருட சாவியுடன் வண்டி நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதேபோல் சைட் லாக் போட்ட வண்டியைத்தான் திருடுவார்கள் என்று நினைப்பதும் முட்டாள்தனமானது.
இதேபோல் பட்டபகலில் பலர் வந்து செல்லும் இடத்தில் சைட் லாக் உடன் வாகனம் இருந்தால் யாரும் திருட மாட்டார்கள் என்று நினைப்பதும் ஏமாற்றத்தையே தரும்.
கடலூர்
ஏனெனில் திருடர்கள் அந்த அளவுக்கு அசால்டாக திருடுகிறார்கள் . கடலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டபகலில் லாவகமாக திருடி சென்றுள்ளார்கள்.
வாகன நிறுத்தம்
கடலூர் பேருந்து நிலையம் அருகே ஆரஞ்ச் மொபைல் ஷோரும் வாசலில் எல்லா வாகனத்தை போல் இருசக்கர வாகனத்தையும் ஒருவர் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்ய போய் இருக்கிறார்.
வாகனம் திருட்டு
அந்த நேர இடைவெளியை பார்த்த இரண்டு பேர் வாகனத்தின் அருகிலேயே நின்று மெல்ல மெல்ல சைட் லாக்கை உடைக்க முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் உடைத்த அவர்கள் அப்படியே வாகனத்தை திருடிக் கொண்டு சென்றனர்.
|
வசதியாகிவிட்டது
முககவசம் அணிய வேண்டும் என்று அரசு சொன்னது இவர்களுக்கு வசதியாக போய்விட்டது,. முகத்தை நன்றாக முககவசம் அணிந்தபடி வாகனத்தை அவர்கள் திருடி சென்றுள்ளார்கள். எனினும் போலீசார் திருடர்களின் அடையாளம் மற்றும் இருசக்கர வாகன எண் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்