லோக்சபா தேர்தலை முன்னிட்டு.. கோயிலில் சாமி தரிசனம்.. மனமுருகி வேண்டிய தொல் திருமாளவன்
கடலூர்: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், கடலூரில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் உள்பட மொத்தம் 102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் காலை 6. 30 மணியில் இருந்தே வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர்.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடலூரில் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் பாணை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
ஓட்டு போடுவதற்கு முன்னதாக தொல் திருமாவளவன் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் அஜித், அமைச்சர் கே என் நேரு, சவுமியா அன்புமணி, ப சிதம்பரம், தமிழிசை சவுந்தரராஜன் என பலரும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்களித்துவிட்டனர்.
இதேபோல் நடிகர் தனுஷ், எல் முருகன், நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், நடிகர் பிரபு என திரை நட்சத்திரங்கள் காலை முதலே வாக்குப்பதிவு செய்தனர். நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். தமிழ்நாட்டில் லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications