Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிச-8 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்துச்செய்யக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழில் படித்தவர்களுக்கே முன்னுரிமை என அறிவித்த நிலையில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர் விண்ணப்பித்துள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்காக 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த சிவராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "பொறியியல் படிப்பு முடித்து ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் விழுப்புரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2017-18 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, புதிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட்டது.

Dec. 8: High Court issues notice to Govt on cancellation of Polytechnic lecturer examination

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 ஆம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பானை வெளியிட்டுள்ளது, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அந்த தேர்வு நாளை (டிசம்பர் 8) தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கல்லூரிக்கான விரிவுரையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் மொழிப்பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விதிமுறை உள்ளது. அவ்வாறு தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வில் பணி கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சிப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியிடங்களில் 100% சதவீதம் தமிழர்களையே நியமிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. நாளை தொடங்கவுள்ள தமிழ் தெரியாத வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து இருப்பதால், கடந்து 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது மனு குறித்து தமிழ்நாடு அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+