கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் திமுக.. 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வாதம்
Recommended Video

டெல்லி: ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க.கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கியது.
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் புகார் கூறிய டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திமுகவும் அமமுகவும் வழங்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில் அமர்வின் விசாரணையில் ஓபிஎஸ் தரப்பும் திமுக தரப்பும் காரசார விவாதத்தை முன்வைத்து வருகிறது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவே கூடாது என கடிதம் கொடுத்தவர் திமுகவின் சக்கரபாணி. அப்படி இருக்க அதிமுக எம்எல்ஏகள் 11 பேர் வாக்குப் பதிவில் அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என சொல்லி வழக்கு தொடுப்பது நியாமற்றது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்: பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடுத்திருக்க கூடிய இந்த வழக்கு முழுக்க அரசியல் உள் நோக்கம் கொண்டது. நீதிமன்றத்திலும் இந்த அரசியலை கொண்டு வருகிறார்கள். எனவே இந்த வழக்கை அடிப்படையிலேயே ரத்து செய்ய வேண்டும்.
வழக்கு தொடுத்திருக்க கூடிய வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் ஆகியோரும் தற்போது எதிர்க்கட்சியில் உள்ளனர். அவர்கள் அதிமுகவில் இல்லை. எனவே இவர்களின் மனுக்களும் அரசியல் உள் நோக்கம் கொண்டது. எனவே இவற்றையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீதிபதி: வழக்கே அரசியல் வழக்குதான்.. அதில் உள்நோக்கம் இருக்க தானே செய்யும்.
ஓபிஎஸ் தரப்பு வாதம்: கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கவே எதிர்கட்சியான திமுக 11 எம்.எல்.ஏகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
11 எம்.எல்.ஏகளும் மீண்டும் கட்சியில் சேர்ந்து விட்டார்கள். அரசுக்கு எதிராக கவர்னருக்கு கடிதம் எழுதிய 18 எம்எல்ஏக்களும் மீண்டும் கட்சியில் சேரவே இல்லை. இது முழுக்க முழுக்க உள்கட்சி விவகாரம். இதில் எதிர்கட்சியான திமுகவிற்கு என்ன வேலை? இப்படியாக விவாதம் போகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications