வட இந்தியாவை புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளம்- 110 பேர் பலி! தொடரும் ரெட் அலர்ட்!
டெல்லி: நாட்டின் வட இந்திய மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் மழை வெள்ளத்துக்கு மொத்தம் 110 பேர் பலியாகி உள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 80 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்கள் கொட்டும் கனமழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 80 பேர் மழைக்கு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 92 பேர் படுகாயமடைந்துள்ளனர். இம் மாநிலத்தின் 41 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பியாஸ் நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
பஞ்சாப் மாநிலமும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தின் கக்கார் நதி அபாய அளவை தாண்டி கரைபுரண்டோடுகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தலைநகர் டெல்லியில் பருவமழைக்கு 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பலியான 10 பேரில் 9 பேர் புனித யாத்திரை வந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 1979-ம் ஆண்டுக்குப் பின் யமுனையில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லி யூனியன் பிரதேச அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் யமுனை நதியில் ஹரியானா மாநில அரசு அணைகளில் இருந்து பெருமளவு நீரையும் திறந்துவிடுகிறது. இதனால் பழைய யமுனை நதி பாலத்தில் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். நைனிடால், சம்பாவத், உதம்சிங் நகர் மற்றும் பவுரி கர்வா மாவட்டங்களில் கனமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications