சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற 3 லோக்சபா சபாநாயகர் தேர்தல்கள்.. என்ன நடந்தது? வென்றவர்கள் யார்?
டெல்லி: நாடு விடுதலைக்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் 3 முறை லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952, 1967 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 1980களின் இறுதிகளுக்குப் பின்னர் இந்தியாவில் கூட்டணி ஆட்சிகளின் சகாப்தம் தொடங்கியதால் ஒவ்வொரு முறையும் சபாநாயகர் யார் என்பதும் முக்கியத்துவம் பெற்றது; மத்தியில் கூட்டணி ஆட்சிகள் அமைந்த காலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டன.
1952-ம் ஆண்டு முதலாவது லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் ஜவஹர்லால் நேரு மவ்லாங்கரை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான இடதுசாரித் தலைவர் ஏகே கோபாலன், சந்தர் சந்தானத்தை முன்மொழிந்தார். இதனால் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மவ்லாங்கர் 394 வாக்குகளையும் சங்கர் சந்தானம் 55 வாக்குகளையும் பெற்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் சங்கர் சந்தானம் பெயர், லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வாக்காளர் பட்டியலிலே இல்லாமல் இருந்ததுதான்.

1967-ம் ஆண்டு தேர்தல்: 1967-ம் ஆண்டும் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டியும் தென்னேதி விஸ்வநாதனும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டி 278 வாக்குகளும் அவருக்கு எதிராக 207 வாக்குகளும் பெறப்பட்டன. இதனையடுத்து நீலம் சஞ்சீவ ரெட்டி சபாநாயகரானார்.
1976-ம் ஆண்டு தேர்தல்: 1976-ம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்ட பின்னர் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் வென்றன. அப்போதும் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பலிராம் பகத், ஜகன்னாத் ராவ் ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பலிராம் பகத், 344 வாக்குகளையும் ஜகன்னாத் ராவ் 58 வாக்குகளையும் பெற்றனர். இதனையடுத்து பலி ராம் பகத் சபாநாயகரானார்.

இதன் பின்னர் 1989-ல் இருந்து கூட்டணி ஆட்சிகளின் சகாப்தம் இந்தியாவில் லிமையானதால் 'சபாநாயகர்' பதவியும் முக்கியத்துவம் பெற்றதானது.
1989-ம் ஆம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சி அமைத்த போது ஜனதா தளத்தின் ரபி ராய் சபாநாயகராக்கப்பட்டார். 1991-ல் காங்கிரஸ் ஆட்சியில் சிவராஜ் பட்டீல் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

1998-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் பாலயோகி சபாநாயகரானார். 1999-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னரும் பாலயோகி சபாநாயகராக தேர்வானார். பாலயோகி மரணம் அடைந்த பின்னர் சிவசேனாவின் மனோகர் ஜோஷி, சபாநாயகர் பதவி வகித்தார். 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்த போது இடதுசாரிகளின் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகரானார். 2009-ம் ஆண்டு மீரா குமார் சபாநாயகராக்கப்பட்டார். 2014-ல் பாஜக ஆட்சி அமைத்த போது சுமித்ரா மகாஜனும் 2019-ல் பாஜக மீண்டும் வென்ற போது ஓம் பிர்லாவும் சபாநாயகர் பதவி வகித்தனர்.












Click it and Unblock the Notifications