அந்தமான் கடலில் புதையல்! இந்தியாவுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்! 20 டிரில்லியன் டாலரை நோக்கி பாய்ச்சல்
டெல்லி: அந்தமான் கடலில் கயானா போன்ற எண்ணெய் களஞ்சியம் விரைவில் கண்டறியப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியா எரிசக்தி துறையில் தன்னிறைவை நோக்கி செல்லும். அதேபோல் இந்தியாவின் பொருளாதாரத்தை 3.7 டிரில்லியன் டாலரிலிருந்து 20 டிரில்லியன் டாலராக உயர்த்த உதவும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பெட்ரோலியம், எரிசக்தி துறை அமைச்சராக இருப்பவர் ஹர்தீப் சிங் புரி. இவர் நம் நாட்டுக்கு குட்நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். நம் நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணெய் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குதி செய்யப்படுகிறது.
அரசாங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி நாட்டின் கச்சா எண்ணெயில் 85 சதவீதம் வெளிநாடுகளிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். அதேபோல் உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன.

இதற்கிடையே தான் கச்சா எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவதிலும் நம் நாடு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி மத்திய பெட்ரோலியத்துறை துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது
இந்தியாவின் எரிசக்தித் துறை ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. அந்தமான் கடலில் எண்ணெய் களஞ்சியத்தை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கயானாவில் கண்டுபிடிக்கப்பட்டதை போல் அங்கு விரைவில் நம் நாடு பெரிய எண்ணெய் களஞ்சியத்தை கண்டுபிடிக்கும். இது சுமார் 1,84,440 கோடி லிட்டர் கச்சா எண்ணெயை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
அந்தமான் கடலில் ஒரு பெரிய கயானாவை நாம் கண்டுபிடிப்பதற்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு கொள்கை மாற்றங்கள், ஆழ்கடல் ஆய்வு உள்ளிட்டவற்றில் தனியார் துறையை பங்களிப்பு செய்ய அனுமதித்தது. இதுதான் இந்த கண்டுபிடிப்பு முக்கியானதாக உள்ளது தெரிவிக்கின்றனர். மேலும் இத்தகைய கண்டுபிடிப்புகள் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கணிசமாகக் குறையும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.
குறிப்பாக கயானாவைப் போன்ற ஒரு பெரிய எண்ணெய் களஞ்சியம் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அது நம் நாட்டின் பொருளாதாரத்தை 3.7 டிரில்லியன் டாலரிலிருந்து 20 டிரில்லியன் டாலராக உயர்த்த உதவும். கிருஷ்ணா, கோதாவரி படுகை பகுதிகள் குறித்து நான் அறிக்கை வெளியிட்டபோது அது வெறும் இடமாக இருந்தது. இப்போது எண்ணெய் வளமிக்க இடம் என்பதற்கான அறிகுறி தென்பட தொடங்கி உள்ளது’’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛எண்ணெய் ஆய்வுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. கயானாவில் 43 அல்லது 44 கிணறுகள் தோண்டப்பட்டன. ஒவ்வொன்றிற்கும் 100 மில்லியன் டாலர் செலவானது. 41வது கிணற்றில்தான் அவர்களுக்கு எண்ணெய் கிடைத்தது. இந்த ஆண்டு ONGC அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் கிணறுகளை தோண்டியுள்ளது. இது கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை.
2024 நிதியாண்டில், ஓஎன்ஜிசி 541 கிணறுகளைத் தோண்டியது. அதில் 103 ஆய்வு கிணறுகள் மற்றும் 438 மேம்பாட்டு கிணறுகள் ஆகும். இதற்காக ரூ.37,000 கோடியை முதலீடு செய்துள்ளது. இது அதன் வரலாற்றில் ஒரு சாதனையாகும்’’ என்றார். அந்தமானில் எண்ணெய் வளம் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கணிசமாகக் குறையும், பொருளாதார நிலையும் உயரும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஹர்தீப் பூரி தனது நேர்காணலின்போது, ஹெஸ் கார்ப்பரேஷன் மற்றும் சீனாவின் CNOOC நிறுவனங்கள் கயானாவில் கண்டுபிடித்த எண்ணெய் வளத்துடன் ஒப்பிட்டார். அந்த கண்டுபிடிப்பு சுமார் 11.6 பில்லியன் பேரல் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டறிந்து கயானாவை உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஒரு முக்கிய சக்தியாக மாற்றியது. தற்போது எண்ணெய் இருப்புகளில் உலகின் 17வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில், கச்சா எண்ணெய் உற்பத்தி தற்போது அசாம், குஜராத், ராஜஸ்தான், மும்பை ஹை மற்றும் கிருஷ்ணா-கோதாவரி படுகை போன்ற பகுதிகளில் குவிந்துள்ளது. விசாகப்பட்டினம், மங்களூர் மற்றும் பாடுர் ஆகிய இடங்களில் কৌশলரீதியான பெட்ரோலியம் இருப்புகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் கூடுதல் தளங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எண்ணெய் இந்தியா மற்றும் ONGC போன்ற நிறுவனங்கள் புதிய இருப்புகளைத் தேடி ஆய்வு மற்றும் துரப்பண நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கும் ஆய்வு நடவடிக்கைகள் இப்போது விரிவடைந்துள்ளன.
அந்தமான் கடலில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டால், இந்தியாவின் பொருளாதாரம் உயரும், இறக்குமதி குறையும். இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications