சென்னை தம்பதிகள் டெல்லியில் கைது! ரூ21,000 கோடி ஹெராயின் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காக கடத்தப்பட்டதா?
டெல்லி: குஜராத்தில் 3,000 கிலோ எடை கொண்ட ரூ21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கடத்தல் தொடர்பாக சென்னையை சேர்ந்த தம்பதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்தியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்யவே இந்த ஹெராயின் கடத்தி கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் அரபிக் கடல்தான் சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களின் பிரதான நீர்வழிப் பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குஜராத் கடலோர பகுதிகள், துறைமுகங்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக குஜராத்தின் கட்ச் பிராந்திய கடற்பரப்பு போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கான இடமாக இருக்கிறது. இந்த நிலப்பரப்பு பாகிஸ்தானுடன் தரைவழியாகவும் கடல் வழியாகவும் இணைக்கிறது.

பயங்கரவாதிகளின் கேட் வே
ராண் ஆப் கட்ச் என்பது சதுப்பு நில பாலைவனமாகும். மழைகாலங்களில் கடல்நீர் சூழ்ந்தும் கோடைகாலங்களில் அகன்ற பாலைவனமாகவும் இருக்கும். இத்தகைய நில அமைப்புதான் போதைப் பொருட்கள் கடத்தலுக்கும் பயங்கரவாதிகள் நுழைவதற்கும் சாதகமாக இருக்கிறது.

ரூ21,000 கோடி ஹெராயின்
கட்ச் பிராந்தியத்தின் முந்த்ரா துறைமுகத்தில்தான் ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் சில நாட்களு9க்கு முன்னர் சிக்கியது. இந்த ஹெராயின் போதைப் பொருள், ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் ஹெராயின் கண்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதிகாரிகள் அதிர்ச்சி
அதாவது ஒரு கண்டெய்னரில் 2,000 கிலோ ஹெராயின் இருந்தது. மற்றொரு கண்டெய்னரில் 1,000 கிலோ ஹெராயின் இருந்தது. குஜராத்தில் இதுவரை மொத்தமாக 3,000 கிலோ ஹெராயின் சிக்கியதும் இல்லை. இதனால் அதிகாரிகள் ஆடிப் போயிருக்கின்றனர்.

டெல்லியில் சென்னை தம்பதி கைது
ஹெராயின் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி தொடங்கி சென்னை வரையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் டெல்லியில் பதுங்கி இருந்த சென்னை தம்பதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் டெல்லியில் சந்தேகத்துக்குரிய ஆப்கான் நாட்டவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியா?
டெல்லியில் சிக்கியவர்களிடம் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதாவது ஹெராயின் போதைப் பொருள் மூலம் கிடைக்கும் பணத்தை இந்தியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதியாக தருவதற்கு ஏதேனும் சதித் திட்டம் தீட்டி இருந்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications