நாடு முழுவதும் 41.64 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள்... 34.46 கோடி தடுப்பூசி டோஸ்கள்!
டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 41.64 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் 34.46 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இதுவரை போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்குப் பிறகு, 5 லட்சத்திற்கும் கீழ், 4,95,533 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.62 சதவீதமாகும்.

நம் நாட்டில் இதுவரை 2,96,05,779 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,477 பேர் குணமடைந்துள்ளார்கள். தொடர்ந்து 51-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.50 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 26 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாக, 2.35 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 41.64 கோடியாக அதிகரித்துள்ளது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 34 கோடியைக் கடந்தது. மொத்தம் 45,60,088 முகாம்களில் 34,46,11,291 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 43,99,298 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் தொடர்ந்து 6-வது நாளாக புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று மட்டும் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்கு பிறகு 5 லட்சத்திற்கும் குறைவாக, 4,95,533 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.62 சதவீதமாகும்.












Click it and Unblock the Notifications