அந்தமானில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.3ஆக பதிவு.. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் ஓட்டம்
டெல்லி: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம்..
இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும். தீவாக இருக்கும் அந்தமானில் ஏற்படும் பெரும்பாலான நிலநடுக்கம் லேசானதாகவே இருக்கும்.

இதற்கிடையே இப்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஓரளவுக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அங்கே கேம்ப்பெல் விரிகுடாவில் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கே இருக்கும் பல முக்கிய கட்டிடங்கள் குலுங்கியன. இதனால் பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியே வந்து சாலைகளில் முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications