54 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா.. சட்டவிரோதமாக நுழைந்தாக குற்றச்சாட்டு!
டெல்லி: டாங்கி ரூட் எனப்படும் கழுதை பாதை வழியாக தங்கள் நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக கூறி, 54 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. 54 பேரும் இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஏற்கெனவே சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என்று கூறி, இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியிருந்துது. சட்டவிரோதமாக நுழைபவர்களை நாடு கடத்துவது சாதாரண ஒன்றுதான். ஆனால் அமெரிக்கா, இந்தியர்களை போர் கைதிகளை போல கை, கால்களில் சங்கிலி போட்டு கட்டி அனுப்பி வைத்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

54 பேர் எந்தெந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி ஊடகம் தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 54 பேரில் 16 பேர் கர்னாலையும், 15 பேர் கைத்தலையும், 5 பேர் அம்பாலாவையும், 4 பேர் யமுனாநகரையும், 4 பேர் குருக்ஷேத்ராவையும், 3 பேர் ஜின்டையும், 2 பேர் சோனிபத்தையும், பஞ்ச்குலா, பானிபட், ரோத்தக், ஃபதேஹாபாத் ஆகிய இடங்களிலிருந்து தலா ஒருவரும் ஆவர்.
54 பேரில் பெரும்பாலானோர் 25-40 வயதுக்கு உட்பட்டவர்கள். நாடு திரும்பியவர்களை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருடன் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும், முகவர்கள் மீது யாரும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இது குறித்து கர்னால் டிஎஸ்பி சந்தீப் குமார் கூறுகையில், "இன்று, மேலும் பல இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். அவர்களில் 50 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 16 பேர். பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த இந்த நபர்கள் 'டாங்கி ரூட்' வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததால் நாடுகடத்தப்பட்டனர்.
நாடுகடத்தப்பட்ட நபர்களை காவல்துறை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளது. எந்த முகவர் மீதும் எந்த புகாரும் பெறப்படவில்லை. சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம். இது தவறான முறை, இது பின்னர் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாடுகடத்தப்பட்டவர்களில் யாரேனும் ஏதேனும் கிரிமினல் பின்னணியை கொண்டிருந்தால் விசாரணையில் தெரிய வரும்" என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கா இந்திய நாட்டினரை நாடுகடத்துவதை தீவிரப்படுத்துகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர், அதாவது கடந்த ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட 1,700 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
-
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
அமெரிக்காவின் பிரம்மாஸ்திரம் எல்லாம் காலி! இப்படித்தான் வீழ்த்தணும்! உலகிற்கே பாடம் எடுக்கும் ஈரான் -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது?












Click it and Unblock the Notifications