லாக்டவுன் விதிமுறையை மதிக்காவிட்டால்.. 6 மாதம் சிறை, அபராதம்.. மக்களே உஷார்
டெல்லி: லாக்டவுன் விதிமுறையை கடைபிடிக்காவிட்டால், 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
Recommended Video
1897ம் ஆண்டின் தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின் கீழ், லாக்டவுன் போன்ற அரசு உத்தரவுக்கு, கீழ்ப்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழி உள்ளது, என்று மூத்த அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை அல்லது உத்தரவுக்கும் கீழ்ப்படியாத எந்தவொரு நபரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுவார், இது ஆறு மாத சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டிற்கும் வழிவகுக்கும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 75 மாவட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையான லாக்டவுன் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
முன்னதாக, விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த அறிவுரை வெளியாகியிருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்ட ட்வீட்டில், சிலர் இந்த வைரசை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அரசு கொடுக்க கூடிய நெறிமுறைகளை அவர்கள் முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான், ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை என்னால் என்ன என்று விளக்கம் கேட்டபோதுதான், அதிகாரிகள், இப்படியான விளக்கம் அளித்தனர்.
லாக்டவுன் செய்யப்பட்ட நகரங்களில், குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் தவிர பிற நிறுவனங்கள் செயல்பட அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications