தேச பாதுகாப்பு காரணம்... பாஜகவில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர் ஐக்கியம்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர், புல்வாமா தாக்குதலுக்கு, பதிலடி தாக்குதல் நடத்தியதை பாஜக தேர்தல் விளம்பரமாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில், மத்திய டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஜேபிஎஸ் யாதவ், ஆர்.என்.சிங், எஸ்.கே.பட்யால், சுனில்குமார், நிதின் கோலி, கர்னல் ஆர்.கே.திரிபாதி, விங் கமாண்டர் நவ்னீட் மாகன் ஆகிய 7 பேர் பாஜக வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாஜகவில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தேச பாதுகாப்பை நிர்மாணிக்கும் கொள்கைகளில், அவர்களின் வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி தல்பீர் சிங், ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவத் தளபதியாக இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 16 அதிரடித் தாக்குதல்களை நடத்திய தல்பீர் சிங்கிற்கு, ஓய்வு பெற்ற பிறகு தூதர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications