தேச பாதுகாப்பு காரணம்... பாஜகவில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர் ஐக்கியம்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர், புல்வாமா தாக்குதலுக்கு, பதிலடி தாக்குதல் நடத்தியதை பாஜக தேர்தல் விளம்பரமாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில், மத்திய டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஜேபிஎஸ் யாதவ், ஆர்.என்.சிங், எஸ்.கே.பட்யால், சுனில்குமார், நிதின் கோலி, கர்னல் ஆர்.கே.திரிபாதி, விங் கமாண்டர் நவ்னீட் மாகன் ஆகிய 7 பேர் பாஜக வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாஜகவில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தேச பாதுகாப்பை நிர்மாணிக்கும் கொள்கைகளில், அவர்களின் வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி தல்பீர் சிங், ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவத் தளபதியாக இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 16 அதிரடித் தாக்குதல்களை நடத்திய தல்பீர் சிங்கிற்கு, ஓய்வு பெற்ற பிறகு தூதர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications