இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 96.43 கோடி
டெல்லி: இந்தியாவில் இதுவரை 96.43 கோடி எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,844 குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3.33 கோடியாகும். அதாவது குணமடைந்தோரின் எண்ணிக்கை 98.06 சதவீதமாக இருக்கும்.

அது போல் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 7,823, மகாராஷ்டிராவில் 2,069, தமிழ்நாட்டில் 1,289, மிசோரத்தில் 1,224 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.40 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது 2.07 கோடி பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மத்திய மாநில அரசுகளின் முயற்சிகலால் கடந்த 108 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,23,399 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 58.63 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அதன்படி இந்தியாவில் இதுவரை 96.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயதினர் வரை 38.88 கோடி பேருக்கு முதல் டோஸும், 10.57 கோடி பேர் இரண்டாவது டோஸும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
அது போல் 45 வயது முதல் 59 வயது வரையில் 16.66 கோடி பேர் முதல் டோஸையும் 8.44 கோடி பேர் இரண்டாவது டோஸையும் செலுத்திக் கொண்டனர். இதையடுத்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 10.51 கோடி பேர் முதல் டோஸையும் 6.03 கோடி பேர் இரண்டாவது டோஸையும் செலுத்திக் கொண்டனர்.
வாராந்திர தொற்று உறுதியானது (Weekly Positivity Rate) கடந்த 110 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே நீடித்து, தற்போது 1.46 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி தற்போது விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 127 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழேயும் 44 நாட்களாக 3 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications