விவசாயிகள் போராட்டம் நடைபெறும் ஹரியானா எல்லையான கன்வரில் விவசாயி தற்கொலை.. உருக்கமான தகவல்
டெல்லி: பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த 53 வயதான விவசாயி குர்மீத் சிங் என்ற விவசாயி, பஞ்சாப் ஹரியானா எல்லையில் உள்ள கானவுரி போராட்ட தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். நிலமற்ற விவசாயியான குர்மீத் சிங், எலக்ட்ரீஷியனாக பல மாதங்களாக பணிபுரிந்து வந்த நிலையில், இன்று உயிரை மாய்த்துக் கொண்டார், இந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ 2.0 போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் மேற்கொண்டனர். இதற்காக டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் நீண்ட கால போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பேரணியாக டெல்லி நோக்கி வந்தார்கள்.

ஆனால் அப்படி வந்த ஏராளமான விவசாயகிளை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்தும், டிராக்டர்களை கூடாரமாக மாற்றியும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் விவசாயிகளை தடுப்பதற்காக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் தூதியன்வாலி கிராமத்தில் வசிக்கும் 53 வயதான விவசாயி குர்மீத் சிங் என்பவர், கடந்த பிப்ரவரி 13ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கானவுரி போராட்ட தளத்தில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
நிலமற்ற விவசாயியான குர்மீத் சிங், எலக்ட்ரீஷியனாகவும் பணிபுரிந்து வந்துள்ளார்., அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.
ஏக்தா சித்துபூரைச் சேர்ந்த ஒரு விவசாயி பல்தேவ் சிங் சந்தோஹா இந்த தற்கொலை குறித்து கூறுகையில்,, குர்மீத் தனது நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தை கட்ட முடியாமல் நிதி நெருக்கடியில் இருந்தார் இதனால் இறந்து போயிருக்கலாம் என்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மகன் திருமணத்தில் கலந்துகொள்ளவதற்கு கூட கிராமத்திற்கு செல்லவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயி குர்மீத், முகாம் விடுதியில் தங்கியிருந்த பகுதியில் காலை 8 மணியளவில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே குர்மீத், தூதியன்வாலி கிராமத்தை சேர்ந்தவர் என்றாலும், மான்சா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். உயிரிழந்த அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவலை பாட்டியாலா மாவட்டம், பத்ரானில் உள்ள தருவா எஸ்ஐ உறுதிப்படுத்தினார்.
இதனிடையே சமனா சிவில் மருத்துவமனையில் நாளை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்பின்னர் அவரது சொந்த கிராமத்தில் உடல் தகனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பி.கே.யு. (சித்துபூர்) சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications