மணமகன் கண் முன்னே.. ஊரெல்லாம் கூடியிருக்க.. திருமணத்தில் மணப்பெண் செய்த காரியத்தால் "அதிர்ச்சி"!
டெல்லி: மாப்பிள்ளை பக்கத்தில் இருக்கும் போது மணப்பெண் செய்த காரியம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
திருமணம் என்பது பெரும்பாலானோர் வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் வைபவம் ஆகும். இந்த திருமணத்திற்காக மணப்பெண்ணும் மணமகனும் போட்டி போட்டு கொண்டு ஆடையை எடுப்பது , மேக்கப் செய்து கொள்வது என இருப்பார்கள்.
மேலும் போட்டோவில் தனக்கு எந்த மாதிரியான மேக்கப் நன்றாக இருக்கும் என்பதை கூட பார்த்து பார்த்து செய்வார்கள். திருமண நாள் நெருங்க நெருங்க மணமகளுக்கும் மணமகனுக்கும் முகமே பளீச்சென இருக்கும்.

சின்ன சின்ன சண்டைகள்
கல்யாண வீடே கலகலவென இருக்கும். சின்ன சின்ன சண்டைகள், கோபதாபங்கள், சிரிப்பு, கொண்டாட்டம், கும்மாளம் என இருக்கும். மணமக்களும் ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டம், வெட்கம், படபடப்பு என இருப்பர். இவ்வாறு வாழ்க்கையில் நிகழும் இந்த மறக்க முடியாத தருணத்தை ரசிக்காமல் மணப்பெண் ஒருவர் தூங்கி பார்த்திருக்கிறீர்களா?

மாப்பிள்ளை
ஆம் ஒரு வடமாநிலத்தவரின் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு பண நோட்டு மாலை அணிவிக்கப்பட்டு எழுந்து நின்று சடங்கிற்காகவும் புகைப்படத்திற்காகவும் போஸ் கொடுத்து கொண்டிருந்தார். சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு தலை முதல் கால் வரை அணிகலன்களை அணிந்து கொண்டு மேக்கப் போட்டு கொண்டு தூங்கி தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

வீடியோ
என்ன நடந்தாலும் தூக்கத்தை விடக் கூடாது என்பதில் அந்த பெண் குறியாகவே இருந்தார். சொந்தக்காரர்கள் பார்ப்பார்களே, குறைந்தபட்சம் மாப்பிள்ளை வீட்டார் பார்ப்பார்கள் என எந்த கவலையும் இன்றி கல்யாணமாவது ஒன்னாவது நாம் தூங்க வேண்டும் என்பது நன்றாக தெரிந்தது. அந்த பெண் தூங்கி வழிந்ததை ஜூம் செய்தும் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்டு தீயாய் பரவிய நிலையில் இதற்கு லைக்குகளும் கமென்டுகளும் அள்ளுகின்றன.

அதிர்ச்சி
இதே போல் சில வாரங்களுக்கு முன்னர் திருமண சடங்குகள் நடக்கும் போது மணமக்கள் இருவருமே கொட்டாவி விட்ட சம்பவம் இணையத்தை சிரிப்பலையில் ஆழ்த்தியது. திருமணத்தில் லேப்டாப்பில் பணியாற்றிய மாப்பிள்ளை, குட்கா போட்டு மென்ற மாப்பிள்ளை, போட்டோகிராபரின் அலப்பறை என தொடர்ந்து திருமணங்கள் குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி நம்மை அதிரவும் சிரிக்கவும் வைக்கின்றன.












Click it and Unblock the Notifications