"வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி.. பாகுபாட்டை உருவாக்கினார்கள்!" - ஆ.ராசா சாடல்
டெல்லி: வந்தே மாதரம் சிறப்பு விவாதத்தில் பங்கேற்றிருந்த திமுக எம்பி ஆ.ராசா, "இந்தியாவில்தான் தேசிய கீதம், தேசிய பாடல் என தனித்தனியாக இருக்கின்றன. தேசிய கீதம் நமது நாட்டை ஒருங்கிணைக்கிறது. பிளவுபட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசிய கீதம் அவசியம். ஆனால் தேசிய பாடலான வந்தே மாதரம், நமது சுதந்திரத்தை பற்றியது, அதன் தாக்கத்தை பற்றியது.வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள்" என்று பேசியுள்ளார்.

நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற மக்களவையில் 10 மணி வரை சிறப்பு விவாதத்தை இன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம் லீக்-க்கு காங்கிரஸ் அடிபணிந்துவிட்டதாகவும், தேசிய பாடலை துண்டு துண்டாகப் பிரித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். வந்தே மாதரம் பாடலை முஸ்லீம் லீக் கட்சி எதிர்த்தது. எனவே, இந்த பாடல் இஸ்லாமியர்களை எரிச்சலடைய செய்யலாம் என்று கருதிய நேரு, பாடலை தேசிய கீதமாக ஆக்கவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ராசா பேசும்போது, "வந்தே மாதரம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு எதிராகவும் இயக்கப்பட்டது என்று முடிவு செய்வதற்கு வரலாற்றில் காரணங்கள் உள்ளன. சுதேசி போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுக்கப்பட்டார்கள். வகுப்புவாதம் இஸ்லாமியர்களால் தூண்டப்படவில்லை. பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே? யாரிடம் உள்ளது என்பதை பற்றி விளக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
நோ இழுபறி.. டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும்! திமுக - காங். கூட்டணி உறுதி செய்த செல்வப்பெருந்தகை? -
28+1 .. முடிவுக்கு வந்த இழுபறி! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது -
திமுக - காங்கிரஸ் கூட்டணி இன்று உறுதியாகிறது.. மகிழ்ச்சியான செய்தி காலை வந்தது.. கோபண்ணா பேட்டி! -
ராஜ்யசபா ரேஸில் 'பேராசிரியர்'.. அறிவாலயத்தின் சர்ப்ரைஸ் தேர்வு - யார் இந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்? -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
MLA சீட்டு கேட்கும் திமுக MP! அறிவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வந்த நிர்வாகிகள்! நாமக்கல் பாலிடிக்ஸ் -
அறிவாலயம் பக்கம் போனா ஒரே அமுக்கு! சின்ன கட்சிகளையும் விட்டு வைக்காத திமுக! ஸ்டாலின் போட்ட ப்ளான்! -
சிட்டிங் எம்எல்ஏ நாகை மாலிக்கு 3 வாய்ப்பும் ஓவர்.. கீழ்வேளூர் தொகுதியில் களமிறங்கும் பெ.சண்முகம்? -
நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு.. பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜக -
தென் மாவட்டங்கள் இலக்கு.. புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக.. என்ன நடந்தது? -
மாலை மகள் நிச்சயதார்த்தம்.. மதியம் ஸ்டாலினுடன் பேச்சு.. திமுக கூட்டணிக்காக போராடும் செல்வப்பெருந்தகை -
ஆர்பி உதயகுமாருக்கு செக்.. ஓபிஎஸ் நடத்தும் பிரம்மாண்ட இணைப்பு விழா.. திமுகவில் இணையும் 1 லட்சம் பேர்












Click it and Unblock the Notifications