Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    AAP invited Baby Mufflerman |கெஜ்ரிவால் பதவியேற்பு.. குட்டி குழந்தைக்கு அழைப்பு

    டெல்லி: டெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் மக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி டெல்லி சட்டசபையின் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்வு செய்தனர்.

    இதையடுத்து அவர் டெல்லியின் முதல்வராக 3 ஆவது முறை இன்று ராம் லீலா மைதானத்தில் பதவியேற்றார்.

    கவலைப்பட வேண்டாம்

    கவலைப்பட வேண்டாம்

    இந்த விழா டெல்லி மக்கள் முன்னர் நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. விழாவில் 6 அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். அப்போது அவர் பேசுகையில் டெல்லியின் மகனாக பதவியேற்றுள்ளேன். டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை.

    உதவி

    உதவி

    டெல்லி தேர்தல் வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. இது ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு டெல்லிவாசிகளின் வெற்றியாகும். கடந்த 5 ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டு வருவதே எங்கள் பிரதான முயற்சியாக இருந்தது. டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்
    டெல்லி வளர்ச்சிக்காக பிரதமரின் உதவியை எதிர்பார்க்கிறேன்.

    உழைப்பேன்

    உழைப்பேன்

    மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படாமல் 5 ஆண்டுகளும் அவருக்காகவும் பாடுபட்டோம். டெல்லி தேர்தல் முடிந்துவிட்டது. நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஆனால் தற்போது அனைத்து டெல்லிவாசிகளும் என் குடும்பத்தினர். நான் கட்சி, மதம், ஜாதி பேதமின்றி 5 ஆண்டுகளும் அனைவருக்காகவும் உழைப்பேன்.

    அன்பு

    அன்பு

    கெஜ்ரிவால் எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறேன் என சிலர் கூறுகின்றனர். விலைமதிப்பில்லாத ஒவ்வொரு விஷயமும் இந்த உலகில் இலவசமாக கிடைக்கும் என்பது இயற்கையான ஒன்று. அது தாயின் அன்பாக இருந்தாலும் சரி, தந்தையின் ஆசிர்வாதமாக இருந்தாலும் சரி. எனவே கெஜ்ரிவால் அவர்களது மக்கள் மீது அன்பாக இருக்கிறார். எனவே இந்த அன்பு என்பது அனைத்தையும் இலவசமாக கொடுக்கும்.

    ஆசிர்வாதம்

    ஆசிர்வாதம்

    பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். அவர் வேறொரு நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. இந்த மேடை வழியாக டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கிறேன் என்றார் கெஜ்ரிவால்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+