என் கணவர் எப்போதும் கூல்.. கோபப்படவே மாட்டார்.. எதையும் கண்டுக்கவும் மாட்டார்.. நடிகை ரஞ்சிதா வீடியோ
டெல்லி: என் கணவர் எதையும் கண்டுகொள்ள மாட்டார் என நித்யானந்தா சிஷ்யையும் நடிகையுமான ரஞ்சிதா கடந்த ஆண்டு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா. மாநிறமாக இருந்தாலும் நம்ம பக்கத்துவீட்டு பெண் போல் இருப்பதால் அவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்ட ரஞ்சிதா, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்தார்.
அங்கு நித்யானந்தாவை தனது குருவாக எண்ணி பூஜித்தார். திடீரென அவரும் நித்யானந்தாவும் ஒரு மெத்தையில் இருந்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நித்யானந்தா
இந்த சம்பவத்துடன் நித்யானந்தாவை விட்டு ரஞ்சிதா விலகியிருப்பார் என கருதினால் அவர் இன்றுவரை நித்தி கூடவே நிழலாக இருக்கிறாராம். நித்தி சொல்லும் கைலாசாவில் ரஞ்சிதாவும் உடனிருந்து கவனித்து கொள்கிறாராம். இந்த நிலையில் ரஞ்சிதா கடந்த ஆண்டு குமுதம் நாளிதழுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

பேலன்ஸ்டு
அந்த பேட்டியில் ரஞ்சிதா கூறுகையில் எனக்கு அப்படியே மாறுபட்டவர் என் கணவர், அதிகமாக யாரிடமும் பேச மாட்டார். நான் வாழ்க்கையிலேயே பார்த்த ஒரே பேலன்ஸ்டு நபர் அவர்தான். என்ன டென்ஷனாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். நிறைய பேர் ஆபிஸில் உள்ள பிரச்சினையை வீட்டில் காட்டுவார்கள். சண்டை போடுவார்கள்.

16 ஆண்டுகள்
ஆனால் எனது கணவர் அப்படி செய்யமாட்டார். 16 ஆண்டுகளாக அவருடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில் ஒரு நாள் கூட கோபப்பட்டு பார்த்ததே இல்லை. யாராவது என்னை பேசிவிட்டால் , நான் கோபப்படுவேன். ஆனால் அவர் என்னை கூல் செய்வார். அவங்க பேசினது பிடிக்காவிட்டால் விட்டுடு கூலாக இரு என என்னை சமாதானம் செய்வார்.

புத்தகம்
நான் கோபப்பட்டாலும் புத்தகம் படித்தால் அந்த கோபத்தையே மறந்துடுவேன். புத்தக வாசிப்பு நம் மனநிலையையே மாற்றிவிடும். வீட்டில் ஏதாவது சண்டை போட்டிருந்தால் கூட அதை 2 நாள் கழித்து கேட்டால் எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. உங்களுக்கு எதுபிடிக்குதோ... அதை செய்யுங்கள்.. அது உங்களை மாற்றும் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications