மோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன?
Recommended Video
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் பெரும் திருப்புமுனையாக அதிமுக சார்பில் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொள்ளவில்லை, அவர் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார் என தெரிகிறது.
நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இது போல் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்தப்பட்டால் பண விரயம் தவிர்க்கப்படும் உள்ளிட்ட காரணங்களை மத்திய அரசு கூறுகிறது. ஆனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புக்கு எதிரானது
இது போல் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடந்தால் நாட்டின் கூட்டாட்சி முறையைச் சிதைக்கும் முறையில் உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சி
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி , மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக பங்கேற்கவில்லை
இந்த கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகமும், மாநிலங்களவை எம்பி நவநீதகிருஷ்ணனும் கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது. இதற்காக சிவி சண்முகமும் இன்று காலை புறப்பட்டு டெல்லி சென்றார். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.

கலந்து கொள்ளவில்லை
கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமைக்கு பதில் நிர்வாகிகள் பங்கேற்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

பங்கேற்கவில்லை
இதையடுத்து அவர் டெல்லிக்கு போயும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் சென்னைக்கு கிளம்பி வந்து கொண்டிருக்கிறார். அதுபோல் திமுக, தெலுங்கு தேசம், காங்கிரஸ் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழகத்திலிருந்து அக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒரே கட்சி அதிமுக என்றிருந்த நிலையில் தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications