டிரம்ப் வரி போட்டா என்ன! இந்தியா எடுத்த புது ரூட்! அமீரகம், சிங்கப்பூர் வழியாக அனுப்ப மாஸ்டர்பிளான்
டெல்லி: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த நிலையில் அமெரிக்காவிற்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்வது பெரிய சிக்கலாகி உள்ளது. இதனால் வேறு நாடுகள் வழியாக இந்தியா ஏற்றுமதி செய்யும் யுக்தியை கையாளலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பை அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு நடவடிக்கையின் உச்சமாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த புதிய வரிவிதிப்பை, இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது.

3ம் நாடுகள் வழியாக ஏற்றுமதி
இதனால் வேறு நாடுகள் வழியாக இந்தியா ஏற்றுமதி செய்யும் யுக்தியை கையாளலாம் என்று கூறப்படுகிறது. நேரடி ஏற்றுமதி இப்போது அதிக செலவு பிடிக்கும் என்பதால், அமெரிக்காவுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்ட மூன்றாம் நாடுகள் வழியாக ஏற்றுமதி செய்வது ஒரு தெளிவான மாற்று வழி என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மிகவும் நம்பிக்கைக்குரிய தேர்வாக உருவாகி வருகிறது. தற்போதைய விதிகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு 10% அடிப்படை வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பு செயல்முறையில் 35-40% உள்ளூர் மதிப்பு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிபந்தனை, தயாரிப்புகள் அமெரிக்காவிற்கு மறு-ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறிப்பிடத்தக்க உற்பத்தி அல்லது செயலாக்கம் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது. அதாவது ஒரு ஆடை முழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 35-40% உள்ளூர் மதிப்பு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அங்கே ஒன்று ஸ்டிக்கர் ஓட்டுவது, சில மாற்றங்களை செய்வது போன்ற நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
ஏற்கனவே பல இந்திய நகைக்கடைகள், ஜவுளி அலகுகள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள அவை விரைந்து செயல்படுகின்றன. இது இந்திய நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி வழிகளைத் திறந்துவிட்டுள்ளது.
சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழி - ஏற்றுமதி
மற்றொரு மாற்று சிங்கப்பூர் ஆகும். சிங்கப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 10% வரி விகிதம் மட்டுமே பொருந்தும். மேலும், இந்தியாவுடன் சிங்கப்பூருக்கு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) உள்ளது. இது இந்திய வணிகங்கள் சிங்கப்பூர் கூட்டாளர்களுடன் இணைந்து அமெரிக்க தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயலாக்க மையங்களை உருவாக்க எளிதாக்குகிறது.
ஹாங்காங் வழியாகும் இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும். குறைந்த வரி மற்றும் வலுவான வர்த்தக உள்கட்டமைப்பு உள்ளதால் ஏற்றுமதி செய்ய முடியும். இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்கனவே இந்திய நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளதால் அதற்கு முன்னுரிமை கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏற்றுமதிக்கு முன் 35-40% உள்ளூர் மதிப்பு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால் இது சில சிக்கல்களை ஏற்படுத்தும்.
2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன. இதை சமாளிக்க 3ம் நாடுகள் வழியாக ஏற்றுமதி செய்வதே சரியாக இருக்கும் என்பதால் வேறு நாடுகள் வழியாக இந்தியா ஏற்றுமதி செய்யும் யுக்தியை கையாளலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications