காங்கிரசுக்கு சங்கடம்.. அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட மணிஷ் திவாரி மறுப்பு
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கடிதத்தில் கையெழுத்திட காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிஷ் திவாரி மறுத்துள்ளார்.
டெல்லி : மத்திய அரசு அறிமுகப் படுத்திய அக்னிபாத் திட்டத்திற்கு, பீகார் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. ரயிலுக்கு தீ வைத்தல் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. ஒருவார காலமாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு, இந்தத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தின.
எனினும் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறமுடியாது என்று தெரிவித்ததோடு, இதற்கான ஆள்சேர்க்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ஏழரை லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அக்னிபாத் திட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஆதரித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான மணீஷ் திவாரியால், காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சமர்ப்பித்த கடிதத்தில் கையெழுத்திட மணீஷ் திவாரி மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் சக்திசிங் கோஹில், திரிணாமுல் காங்கிரசின் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் சௌகதா ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் ஏ.டி. சிங் உள்ளிட்ட 6 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.












Click it and Unblock the Notifications