அதிரடி.. மத்திய அரசுக்கு வெற்றி.. "அக்னிபாத்" திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும்: உச்ச நீதிமன்றம்
டெல்லி: அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் முப்படைகளில் பணியாற்றி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. ராணுவம் தனது படைபிரிவுகளுக்கு தேவையான வீரர்களை அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.

அக்னிபாத் திட்டம் : முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டமான இதில், தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்ற முடியும். இந்த வீர்களில் 25 சதவீதம் பேர் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பிற வீரர்கள் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாது.
இந்த திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் பணியில் சேர முடியும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் ராணுவ பணியில் தயாராகி வந்த இளைஞர்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் இளைஞர்களின் வயது வரம்பு 23 ஆக அதிகரித்தது உள்ளிட்ட சில சலுகைகளை அறிவித்தது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.. இந்த திட்டம் வெளிநாடுகளில் தோல்வி அடைந்தது என்பதோடு தேச பாதுகாப்புக்கு கூட ஆபத்தாக மாறும் என்ற வாதங்களை முன்வைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
சட்டப்படி செல்லுபடியாகும்: அதேபோல், இந்தத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அக்னிபாத் திட்டம் சட்டபடி செல்லுபடியாகும் எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. மத்திய அரசு நன்கு ஆலோசித்து கொண்டு வந்துள்ள கொள்கை முடிவு என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து அது செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்தது. இதன்படி, அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications