காற்று மாசு! தத்தளிக்கும் தலைநகர் டெல்லி! அனல்மின் நிலையத்தையும் மூடியாச்சு!
டெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் புகை நச்சுமண்டலத்தால் கடந்த 10 நாட்களாக அவதியுற்று வருகிறது. இதனால் சிறிது நாட்களுக்கு டெல்லி மாநிலத்தில் முழுமுடக்கம் அறிவிக்கலாம் என ஆலோசனை கூறியிருத்தது. இதனை பரிசீலித்த டெல்லி மாநில அரசு முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவித்துள்ளது.
அதேபோல் அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தி உள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் காற்று மாசு குறைந்தபாடில்லை. சாலைகள் முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளால் நிம்மதியாக செல்ல முடியவில்லை.

காற்று மாசுவிற்கு என்ன காரணம்?
டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சூழ்ந்துள்ள புகை மண்டலத்திற்கு முதலில் அண்டை மாநிலங்களில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் எனக் காரணம் கூறப்பட்டது. ஆனால் நீண்ட ஆய்வுக்குப்பின்னர் காற்று மாசுவிற்கு அது பிரதான காரணம் இல்லை என்றும், வாகனங்களில் வெளியேறும் புகையும் சமீபத்தில் தீபாவளி பண்டிகையால் பொதுமக்கள் வெடித்த பட்டாசும்தான் காரணம் என தெரியவந்துள்ளது.

காற்று தர மேலாண்மை ஆணையம் கட்டுப்பாடு
இந் நிலையில், டெல்லி காற்று தர மேலாண்மை ஆணையம் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அறிவித்துள்ளது. நவம்பர் 21 வரை அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள், லாரிகள் டெல்லி மாநிலத்திற்குள் நுழையக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வருட வாகனங்கள் பயன்படுத்தத் தடை
மேலும் 15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விமானம், ரயில், பேருந்து மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தவிர்த்து மற்ற கட்டுமானம், இடிப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனல்மின் நிலையங்கள் மூடல்
மேலும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300 கிமீ தொலைவுக்குள்ள அனல்மின்நிலையங்களில் ஐந்தை தவிர மற்றவைகளை நவம்பர் 30 வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெய்ஜார், மகாத்மா காந்தி, உள்ளிட்ட 5 அனல்மின்நிலையங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக சி.என்.ஜி. மூலம் அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபராதம்
மேலும் சாலைகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை கொட்டினால் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தவது தொடர்பான கூட்டத்தில் உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புதிய விதிகள் வகுக்கப்பட்டது தொடர்பாக நவம்பர் 22ம் தேதி அறிக்கை அளிக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications