வாட்டி வதைக்கும் குளிர்.. வட மாநிலங்களில் தவிக்கும் மக்கள்! விமான, ரயில் சேவைகளும் பாதிப்பு
டெல்லி: வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில், ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லிக்கு இன்றும் நாளையும், கடும் பனி மூட்டத்திற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக டிசம்பர் தொடங்கி ஜனவரி வரை நாடு முழுவதும் பனி மூட்டம் இருக்கும். ஆனால் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு பனி பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் 7 டிகிரி அளவுக்கு குளிர் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகனங்கள் சிறு சிறு விபத்தில் சிக்கியுள்ளன. சாலையோரம் இருப்பவர்களை, மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. அதேபோல காற்றின் தரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் டெல்லிக்கு வரும் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டிருக்கின்றன. சுமார் 14 ரயில்களும் கடும் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வானிலை சூழல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, டெல்லியில் பனி மூட்டத்திற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலத்திலும் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
இந்த காலங்களில் வழக்கமாக பனி மூட்டம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த முறை இயல்பைவிட அதிமாக பனிமூட்டம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக கூட இது போன்று கடும் பனிமூட்டம் நிலவலாம் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications