பாஜக கூட்டணியில் பிளவு- டெல்லியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு?
டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, டெல்லி யூனியன் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 25 முதல் 30 தொகுதிகளில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. அதேநேரத்தில் மகாராஷ்டிரா தவிர்த்த பிற மாநிலங்களிலும் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட்டு வருகிறது.

2020-ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த நிலையில் முதல் முறையாக தற்போது டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
டெல்லி தேர்தலில் 20 முதல் 25 தொகுதிகளில் போட்டியிடுவது என அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. டெல்லி தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் விரைவில் அறிவிக்க உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஏற்கனவே களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications