முஸ்லீம் லீக்.. சிவசேனாவின் பங்காளியான நீங்க மதசார்பற்ற கட்சியா.. காங்..மீது அமித்ஷா தாக்கு
Recommended Video
டெல்லி: முஸ்லீம் லீக்குடனும், சிவசேனா உடனும் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் மதசார்பற்ற கட்சியா என்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 311 வாக்குகளும் அதற்கு எதிராக 80 வாக்குகளும் விழுந்தது.
முன்னதாக குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதம் கிட்டத்தட்ட 8 மணி நேரம் வரை நீடித்தது. குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாத்தின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டை கூறின. அவர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்தார் அமித்ஷா. இதனால் தான் நேற்று விவாதம் அனல் பறந்தது.

மதசார்பற்ற கட்சியா
குடியுரிமை திருத்த மசோதா இயற்கையாகவே இனவாதத்துடன் இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியதற்கு அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், மதசார்பற்ற கட்சி என கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி கேரளாவில் முஸ்லீம் லீக் உடன் கூட்டணி வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா உடன் கூட்டணி வைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் மதசார்பின்மையா என்றார்.

நன்றி சொன்னார்
இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி ஒரு ட்வீட்டில், "மக்களவை குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 ஐ நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. மசோதாவை ஆதரித்த பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மசோதா இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது மற்றும் மனிதாபிமான விழுமியங்களை நம்புகிறது. " என்று கூறியுள்ளார்.

பொறுமையாக விளக்கினார்
குடியுரிமை திருத்த மசோதாவின் பல்வேறு அம்சங்களை பொறுமையாக விளக்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

இனி இந்தியர்கள்
குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 ன் படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மததுன்புறுத்தலை எதிர்க்கொண்டதால் இந்தியா வந்துள்ள இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பபடும். அதாவது அவர்கள் டிசம்பர் 31, 2014 முன்பு இந்தியா வந்திருந்தால் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்திய குடிமக்களாக மாற்றப்படுவார்கள்.

மத்திய அரசு
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். அங்கு பலத்தை திரட்டும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு
இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுகந்தாராய், என்.கே. பிரேம்சந்திரன், கௌரவ் கோகோய், சசி தரூர் மற்றும் அசாருதீன் ஒவைசி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பல எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களின் தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர், இந்த மசோதாவை அறிமுகம் செய்யவே அவர்கள் கடுமையாக எதிர்த்தனர் அரசியலின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கை என விமர்சித்தனர்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications