இந்தியாவின் தேசிய மொழி இந்தி.. அமித் ஷா பேச்சால் நாடு முழுக்க பெரும் அதிர்வலை!
Recommended Video
டெல்லி: நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் இந்தியா பல மொழிளை கொண்ட ஒரு நாடு. இங்கு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு.
ஆனால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த ஒரு மொழி வேண்டும் என்று மிகவும் முக்கியமானது. நாட்டை ஒரே மொழி ஒருமைப்படுத்த வேண்டும் என்றால் அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியாகும்.

இந்தி
ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். அவரவர் தாய்மொழியை பேசும் வேளையில் இந்தியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கனவை நனவாக்க
அது போல் மற்றொரு ட்வீட்டில் அவர் கூறுகையில் இன்று இந்தி தினம். நாட்டின் குடிமக்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அதாவது நமது தாய்மொழியான இந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மறைமுக திணிப்பு
அமித்ஷாவின் இந்த கருத்து இந்தியை திணிப்பதற்கு சமமாக உள்ளது. ஒரே மொழியாக இந்தியை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் என்றால் இத்தனை நாட்கள் இந்தியாவுக்கு அடையாளம் ஏதும் இல்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் எதிர்ப்பு
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்புகள் எழும். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள இரு மொழி கொள்கைக்கு பதிலாக மும்மொழி கொள்கை கொண்டு வந்து அதில் இந்தியை திணிக்க மத்திய அரசின் முயற்சியை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அது போல் அமித்ஷாவின் கருத்து தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications