"உடனே உள்ளே வாங்க".. ஆட்டத்திற்கு முன் அழைக்கப்பட்ட வீரர்.. இந்திய - ஆஸி டெஸ்டில் நடந்த பரபர சம்பவம்
பிட்சில் இடதுகை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிய காரணத்தால் பிட்ச் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் அப்படியே மறைந்து போயின.
டெல்லி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கு முன்பாக வீரர் ஒருவர் திடீரென பெவிலியனுக்கு அழைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 177 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சிலேயே 400 ரன்கள் எடுத்தது. இதில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். ஜடேஜா, அக்சர் அறை சதம் அடித்தனர்.

இன்னிங்ஸ் வெற்றி
இதையடுத்து இறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முக்கியமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையாக பிரஷர் கொடுத்தார். இதனால் ஆஸ்த்திரேலியா அணி வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலிய அணி இதனால் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த பிட்சில் இடதுகை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிய காரணத்தால் பிட்ச் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் அப்படியே மறைந்து போயின.

இந்திய அணி
இதையடுத்து இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் நடைபெறுகிறது. டெல்லியில் இந்த போட்டி நடைபெறுகிறது. பிட்ச் காரணமாக தற்போது கடுமையாக பந்து ஸ்விங் ஆகிக்கொண்டு இருக்கிறது. கடும் பனிபொழிவிற்கு இடையில் மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது. இன்று ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இன்று களமிறக்கப்பட்டு உள்ளனர். கடந்த போட்டியில் களமிறக்கப்பட்ட சூர்யா குமார் யாதவ் இந்த போட்டியில் களமிறக்கப்படவில்லை.

ஷ்ரேயாஸ்
அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டு உள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கு முன்பாக வீரர் ஒருவர் திடீரென பெவிலியனுக்கு அழைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மேட்சில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (வாரம்), பாட் கம்மின்ஸ் (கேட்ச்), நாதன் லியோன், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

மேத்யூ குஹ்னெமன்
இதில் மேத்யூ குஹ்னெமன் ஆஸ்திரேலிய அணியில் இன்று அறிமுகம் ஆனார். அவர் இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆடியது இல்லை. இதனால் அவரிடம் ஆஸ்திரேலியாவின் வெள்ளை உடையில் போட்டோ இல்லை. அவர் இப்போதுதான் ஆஸ்திரேலியா ஸ்கூவாடிலும் நுழைந்த காரணத்தால் தொடருக்கு முன்பும் அவரின் புகைப்படம் எடுக்கப்படவில்லை. இதனால் இன்று மேட்சிக்கு முன் ஆஸ்திரேலிய நிர்வாகிகள் அவரை அவசரமாக உள்ளே அழைத்து சென்றனர். உள்ளே அழைத்து சென்று அவரின் புகைப்படத்தை எடுத்தனர். அணி அறிவிக்கும் முன்பே அவரின் புகைப்படம் எடுக்கப்பட்டதால் அவர் இன்று களமிறக்கப்படுவது அப்போதே உறுதியானது. மேத்யூ குஹ்னெமன் இடது கை ஸ்பின் பவுலர் ஆவார். ஜடேஜா, அக்சர் போல இவரை தங்கள் அணிக்கு பயன்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications