டெல்லி மற்றும் ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு!
டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக தலைநகர் டெல்லியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மொத்தம் 17,387 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று மற்றும் 1106 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியை கொரோனா உலுக்கி உள்ள நிலையில் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சரியாக இரவு 9.20 மணி அளவில் டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் அங்கு மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியின் அதிக மக்கள் வசிக்கும் முக்கிய பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதேபோல் ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் நிலநடுக்கம் பதிவானது. அங்கும் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக எவ்வளவு சேதம் ஏற்பட்டது, என்ன பாதிப்பு ஏற்பட்டது விவரங்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications