கடற்கரையில் கரை ஒதுங்கிய வினோத உயிரினம்.. கடல் கன்னியா? ஆய்வுகள் சொல்வது என்ன? பயங்கரமா இருக்கே!
டெல்லி: பப்புவா நியூ கினியாவில் உள்ள கடற்கரையில் வினோதமான உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்கடலில் மீன், ஆமை, நண்டு, திமிங்கலம், ஆக்டோபஸ் உள்ளிட்டவை இருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் நிறைய பெயர் தெரியாத பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இருப்பது நமக்கு தெரியாது.

கடலில் கடற்கன்னி, கடல் பாம்பு, கடல் குதிரை உள்ளிட்டவை இருப்பதும் நமக்கு தெரிந்ததே. ஆனால் அவையெல்லாம் எல்லாருமே நேரில் பார்த்திருக்க முடியாது. அப்படியிருக்கும் நிலையில் பப்புவா நியூ கினியாவில் ஒரு விசித்திரமான விலங்கு கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி , பப்புவா நியூ கினியாவில் பிஸ்மார்க் கடலில் உள்ள சிம்பேரி தீவில் உள்ள மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் உள்ளது. கடல் கன்னிபோல் காட்சியளிக்கிறது. மிக நீளமாக உள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில் இந்த உயிரினம் குளோப்ஸ்டர் என அழைக்கப்படுகிறது. இந்த உயிரினத்தின் பெரும்பகுதி அழுகி விட்டது. பல பாகங்கள் கடலில் விழுந்துவிட்டன. இதை தேடியும் கிடைக்கவில்லை. உள்ளூர்வாசிகள்தான் அதை புதைத்தனர். சடலத்தின் அளவு மற்றும் எடை குறித்து எந்த தகவலும் எடுக்கப்படவில்லை.
அதன் டிஎன்ஏ மாதிரிகளை கூட யாரும் சேகரிக்கவில்லை என்றார். இந்த உயிரினம் கடல் பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்காக இருக்கலாம் என தெரிகிறது என பலர் தெரிவித்துள்ளனர். குளோப்ஸ்டர் என்றால் கடல் வாழ் உயிரினங்களின் சதைகள் என்கிறார்கள். மேலும் அது ஒரு கடல் பசுவாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் அந்த உயிரினம் பல வாரங்களுக்கு முன்பு இறந்திருக்கக் கூடும் என்கிறார்கள்.
இது ஒரு பெரிய சுறா மீனாக இருக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனவ இது ஒரு கடல் பாலூட்டியாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த விலங்கு குறித்து கடல் வாழ் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தோல் வேறு நிறத்தில் இருந்திருக்கும். இறந்தததால் தோல் உரித்துக் கொண்டு அதன் நிறம் வெள்ளையாக மாறியிருக்கலாம் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications