என்னா வேணும்..5 குவார்ட்டர் வேணும்.. பைப் வழியா அனுப்பறேன் பிடிச்சுக்கோ.. அடடே ஐடியா! இன்னோவேட்டிவ்!
டெல்லி: கொரோனா பீதியால் நாம் யாரையும் தொடாமல் பொருட்களை பெறுவதே பாதுகாப்பான நடைமுறையாகும். இவற்றை உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களில் கடைப்பிடிக்கலாம். ஆனால் மதுபான பாட்டில்களில் எப்படி கடைப்பிடிப்பது? நீங்களே பாருங்கள்.
மகிந்த்ரா குரூப்களின் தலைவர் ஆனந்த மகிந்த்ராவின் ட்விட்டர் வீடியோவை பார்த்தால் அதுவும் சாத்தியம் என்றே தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வீட்டு வாசற்படி
இதனால் நாம் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவற்றை கடைப்பிடித்து வருகிறோம். வெளியில் வாங்கி வரும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நீரில் கழுவி வைக்கிறோம். அது போல் ஓட்டல்களில் இருந்த பெறப்படும் உணவு வகைகளும் வீட்டு வாசற்படியில் வைக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்
அந்த வகையில் மதுபான பாட்டில்களையும் விற்பனையாளரை தொடாமல் வாங்கும் புதிய ஐடியா வைரலாகி வருகிறது. வடஇந்தியாவில் ஒரு மதுபான கடையில் வாடிக்கையாளருக்கும் கடைக்கும் நீண்ட பைப் போடப்பட்டுள்ளது. அந்த பைப் வழியாக பிளாஸ்டிக் பாட்டிலை கடைக்காரர்கள் அனுப்புகிறார்கள்.

காசு
அவர் அனுப்பும் பாட்டிலில் காசை வைத்து அனுப்பினால் தேவையானதை எடுத்து கொண்டு மீதி சில்லறை அந்த வாட்டர் பாட்டிலில் வருகிறது. பின்னர் வாடிக்கையாளர் கொடுத்த பணத்திற்கு உண்டான சரக்குகளும் பைப் மூலம் வருகிறது. இதை எடுத்து கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.
Recommended Video

சமூக இடைவெளி
கூட்ட நெரிசல் இல்லை. முண்டியடித்து வாங்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே வாங்க முடியும். பாட்டில்கள் கீழேவிழுந்தாலும் உடையாத வண்ணம் அட்டை பெட்டிகள் நிரப்பட்டுள்ளன. இதுதான் சரியான சமூக இடைவெளி. இது போன்ற டெக்னிக் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது மதுபான பாட்டில்களுக்கும் பயன்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications