அனந்த்குமார் மரணம்.. கர்நாடகத்திற்குப் பேரிழப்பு.. காவிரிக்காக தீவிரமாக போராடியவர்!
Recommended Video

டெல்லி: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமாக எதுவும் நடந்து விடாமல் தான் சார்ந்த கர்நாடகத்திற்கு ஆதரவாக, மத்தியில் தீவிரமாக பாடுபட்டவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார்.
கர்நாடக காவிரி பாசனப் பகுதி மக்களால் மறக்க முடியாத ஒரு தலைவர் அனந்த் குமார். பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இல்லாத போதும் சரி, கர்நாடகத்தின் முக்கிய விவகாரமான காவிரிப் பிரச்சினையில் தனது மாநிலத்திற்காக தீவிரமாக பாடுபட்டவர் அனந்த் குமார்.
கர்நாடகாவிலிருந்து வரும் அனைத்துக் கட்சிக் குழுக்களில் தவறாமல் இடம் பெற்று, கட்சி பாகுபாடின்றி, மாநில நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டவர் அனந்த் குமார்.

வாரியத்திற்குப் பதில் ஆணையம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் காவிரிப் பிரச்சினையில் அனல் வீசியது. உச்சநீமன்றம் காவிரி வழக்கில் இறுதித் தீர்ப்பை அளித்தது. அந்தத் தீர்ப்பு தமிழகத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தீர்ப்பின்போது காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில் ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

நெருக்குதல் - லாபி
காவிரி மேலாண்மை வாரியம் அமைய விடாமல் மத்திய அரசை தடுத்து ஆணையம் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசை வரவைத்ததில் அனந்த் குமாரின் பங்கு மிக முக்கியமானது. இவர் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழுவினரின் நெருக்குதல்கள் மற்றும் தீவிர லாபியால் மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிரான மன நிலைக்கு போனது.

கர்நாடகத்திற்கு இழப்பு
உண்மையில் அனந்த்குமாரின் மறைவு, கர்நாடகத்திற்கு பெரும் இழப்புதான் காவிரி விவகாரம் என்றில்லாமல், பல்வேறு மாநிலம் சார்ந்த பிரச்சினைகளுக்காக டெல்லியில் தீவிரமாக குரல் கொடுத்து அதை சாதிப்பதிலும் வெற்றி கண்டவர் அனந்த் குமார். கர்நாடக பாஜகவுக்கும் கூட இவரது மறைவு பெரும் இழப்புதான்.

தமிழகத்திற்கும் இவர் போல கிடைத்திருந்தால்
தமிழகத்திற்கு அனந்த் குமார் போல ஒரு அமைச்சர் கூட மத்தியில் இதுவரை அமைந்ததில்லை. அனந்த் குமார் போன்ற ஒரு தலைவர் தமிழகத்திற்கும் கிடைத்திருந்தால் தமிழகமும் கூட பல நல்ல வளங்களை மத்தியிலிருந்து பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications