Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோகிங்யா முஸ்லீம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு? அமைச்சரின் தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வீடு வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், சில மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான மறுப்பை தெரிவித்துள்ளது.

Recommended Video

    Pak JF17-ஐ சும்மா நிறுத்தி வைத்துள்ள Myanmar | Rajnath-த்திடம் Vietnam கோரிக்கை | அடுத்த CDS?

    இந்தியாவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் ரோகிங்யா முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார்.

    டெல்லியின் வடக்கு மாநகராட்சி ஜஹாங்கிர்புரி பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது ரோகிங்யா முஸ்லீம்கள் குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது.

    Apartments for Rohingya Muslims? The Ministry of Home Affairs refused to inform the minister

    கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியின் ஜஹாங்கிர்புரி எனும் இடத்தில் ரோகிங்யா முஸ்லீம்கள் வசித்த பகுதிகளை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் மாநகராட்சி இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பெரும் பதற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரிட்டபோதும் வீடுகளை இடிக்கும் பணிகள் 2 மணி நேரம் நீடித்திருந்தது. இந்நிலையில் இந்த ரோகிங்யா முஸ்லீம்கள் சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து தங்கியுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

    இதனையடுத்து நேற்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த ட்வீட் பின்வருமாறு, "இந்தியாவில் தஞ்சமடைந்த மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். டெல்லியை அடுத்த பக்கர்வாலா பகுதியில் அமைந்துள்ள அரசு குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மதம், இனம், நிறம் என பாகுபாடு பார்க்காமல் அனைத்து அகதிகளுக்கும் சமமான அளவில் மரியாதையை இந்தியா அளிக்கும்" என்று கூறியிருந்தார்.

    ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ரோகிங்யா முஸ்லீம்கள் வசித்து வரும் பகுதிகள் தற்போது 'தடுப்பு முகாம்களாக' மாற்றப்பட இருப்பதாகவும் விரைவில் இவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல மத்திய அமைச்சர் அறிவித்திருந்த 'பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான' அடுக்குமாடி குடியிருப்புகள் ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வழங்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட சில பிரச்னைகளைத் தொடர்ந்து ரோகிங்யா முஸ்லீம்களை வேறு இடங்களுக்கு மாற்ற டெல்லி அரசு கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து அமைச்சரின் அறிவிப்பு வரவே மத்திய உள்துறை அமைச்சகம் அதனை மறுத்துள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டதைப்போல ரோகிங்யா முஸ்லீம்களை சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்ப வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ரோகிங்யாக்களை தற்போது இருக்கும் இடத்தில் நீடிப்பதையே உறுதி செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+