எழுவர் விடுதலை.. எங்களை இனியும் யாரும் ஏமாற்ற வேண்டாம்.. டெல்லியில் அற்புதம்மாள் கண்ணீர்!
டெல்லி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் யாரும் ஏமாற்ற வேண்டாம் என அற்புதம்மாள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் 7 பேர் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.

10 மாதங்கள்
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் 10 மாதங்களாகியும் ஆளுநர் அதில் கையொப்பமிடவில்லை.

அமித்ஷாவுடன் சந்திப்பு
இந்த நிலையில் 7 பேர் விடுதலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பிக்கள் திருமாவளவனும் ரவிக்குமாரும் இணைந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டனர்.

விவகாரத்தில்
இதற்காக அற்புதம்மாளையும் அவர்கள் வரவழைத்தனர். இந்த நிலையில் மூவரும் சேர்ந்து அமித்ஷாவிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் கூறுகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் யாரும் ஏமாற்ற வேண்டாம்.

நீதிமன்றத்துக்கு
என் மகன் விடுதலை ஆவார் என நம்பியே 28 ஆண்டுகள் ஓடிவிட்டன. உச்சநீதிமன்றமே 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சொல்லிவிட்ட நிலையில் நாங்கள் இதற்கு மேல் எந்த நீதிமன்றத்துக்கு செல்வது.

முதல்வரையும் சந்திக்க திட்டம்
இதுகுறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா தெரிவித்தார். விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்திப்பேன் என்றார் அற்புதம்மாள்.












Click it and Unblock the Notifications