உயிருடன் எரிக்க முயற்சி? கெஜ்ரிவால் மீது திடீர் திரவ தாக்குதல்.. ஆம்ஆத்மிக்கு போலீஸ் தந்த விளக்கம்
டெல்லி: டெல்லியில் பாதயாத்திரை சென்றபோது முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஒருவர் திடீரென்று திரவத்தை ஊற்றினார். ஸ்பிரிட் ஊற்றி கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி நடந்ததாக ஆம்ஆத்மி குற்றம்சாட்டியுள்ள நிலையில் போலீஸ் முக்கிய விளக்கம் தந்துள்ளது.
டெல்லி முதல்வராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவர் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புதிய மதுபான கொள்கை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக அதிஷி செயல்பட்டு வருகிறார். அடுத்த ஆண்டு டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கெஜ்ரிவால் தற்போது பாதயாத்திரை சென்று வருகிறார்.
அதன்படி நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள மாள்வியா நகரில் பாதயாத்திரை சென்றார். அவருடன் கிரேட்டர் கைலாஷ் எம்எல்ஏவும் மற்றும் அமைச்சரான சவுரவ் பரத்வாஜ் உள்பட பலர் சென்று கொண்டனர். கெஜ்ரிவால் இசட்+ பாதுகாப்பில் இருப்பதால் யாரும் நெருங்காத வகையில் அவர் செல்லும் பாதையில் அவரை சுற்றி கயிறை பயன்படுத்தி பாதுகாவலர்கள் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.
அப்போது திடீரென்று ஒருநபர் கெஜ்ரிவால் மீது திரவத்தை ஊற்றிவிட்டு ஓட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயர் அசோக் ஷா என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் ஆம்ஆத்மி கட்சியின் சவுரவ் பரத்வாஜ் கூறுகையில், ‛‛அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் கொல்ல முயன்றார். அவரை உயிருடன் எரித்து கொல்வதற்கான முயற்சி நடந்துள்ளது. அந்த நபர் ஸ்பிரிட்டை கெஜ்ரிவால் மீது ஊற்றி தீவைக்க முயற்சி செய்துள்ளார்'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.
ஆனால் ஆம்ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். இதுபற்றி டெல்லி துணை போலீஸ் கமிஷனர் அங்கித் சவுகான் கூறுகையில், ‛‛பாதயாத்திரைக்கு அனுமதி பெறவில்லை. இருப்பினும் கூட்டம் கூடியதால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மாலை 5.50 மணியளவில் கெஜ்ரிவால் மீது தண்ணீர் ஊற்ற முயற்சி செய்யப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பூ கொடுப்பது போல் தண்ணீர் ஊற்ற முயற்சி நடந்தது. அதனை போலீசார் தடுத்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் பின்னணி பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications