ஆப்கானில் நடக்கும் விஷயங்கள்.. எங்களை கவலையடைய அடைய செய்கிறது.. யுஎன்எஸ்சியில் இந்தியா பேச்சு!
டெல்லி: அண்டை நாடு என்ற முறையில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் இந்தியாவை கவலையடைய அடைய செய்கிறது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவிற்கு வந்து தாலிபான்கள் அங்கு வெற்றிபெற்றுள்ளது. அதிபர் அஷ்ரப் கானியை வெளியேற்றிவிட்டு அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. விரைவில் அங்கு தாலிபான் சார்பாக அதிபர், அமைச்சர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பாக அவசரமாக மீட்டிங் நடத்தப்பட்டது. இந்தியாதான் இந்த மாதத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நாடாக திகழ்ந்து வருகிறது. இதனால் இன்று நடந்த கூட்டத்தில் இந்தியாவின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இந்தியா
ஐநா கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பாக இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி பேசினார். அதில், ஆப்கானிஸ்தானில் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் அண்டை நாடு என்ற முறையில் அங்கு நடக்கும் விஷயங்களை இந்தியா கவனித்து வருகிறது.

கவலை
அண்டை நாடு என்ற முறையில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் தற்போதைய விஷயங்கள் இந்தியாவை கவலையடைய அடைய செய்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலைமை விரைவில் சரியாகும் என்று நம்புகிறோம். காபூலில் ஹாமித் கார்சாய் விமான நிலையத்தில் நடந்த விஷயங்கள் துரதிஷ்டவசமானது.

மக்கள் ஆச்சம்
அங்கு மக்கள் இடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. பெண்களும், குழந்தைகளும் பெரும் கவலையில் இருக்கிறார். அங்கு துப்பாக்கி சூடுகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு விமான நிலையத்தில் கூட துப்பாக்கி சூடுகள் நடந்ததாக செய்திகள் வருகின்றன.
Recommended Video

பாதுகாப்பு
அங்கு உடனே அமைதி திரும்ப வேண்டும். அங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு கடைபிடிக்க வேண்டும். அங்கு ஐநா ஊழியர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட எல்லோருக்கும் அங்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications